பாகம் – 19 - சுசீலா மாணிக்கம்ஓவியம்; பத்மவாசன்மனித வாழ்வின் வெற்றிச் சூத்திரங்களை எளியோரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிதாக்கி தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் நம் தமிழர் பெருமையாம் திருக்குறளின் பத்தொன்பதாம் அதிகாரம் ‘புறங்கூறாமை’.ஒருவர் அவ்விடத்தில் இல்லாதபோது அவரைப் பற்றி இகழ்ந்து பேசுதல் புறங்கூறுதலாகும். கோள்மூட்டுதல் (பொரணி பேசுதல்) சற்றே மாறுபட்டது எனலாம். ஒருவரின் புகழையும் தகுதியையும் மறைக்கும் எண்ணம் கொண்டு அவரைப்பற்றி திரித்துக் கூறுதல் புறம்பேசுதலாம். கோள் சொல்லுதல் என்பது ஒருவரின் சிறு தவறையும் பெரிதாக்கி பிறரிடம் பிரஸ்தாபிப்பது. ஆனால் இவை அனைத்து கெட்ட குணங்களையும் தன்னகத்தே கொண்டு வதந்தி(தீ) என்னும் பெருந்தீயை குடும்ப, சமுதாய உறவுகளில் ஏற்படுத்துவது மிகப் பெரும் சிக்கலை உருவாக்கும் என்பது மட்டும் உறுதி. அறனழீஇ யல்லவை செய்தலின் தீதேபுறனழீஇப் பொய்த்து நகை ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்து பேசிவிட்டு , அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றி பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்துவிட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதை விடக் கொடுமையானது. பொன்னியின் செல்வன் புதினத்தின் கோடிக்கணக்கான தீவிர ரசிகர்களுடன் ஆன்ம தொடர்புகொண்டு நம் கனவிலும் நினைவிலும் எப்போதும் நம்முடனே வாழ்ந்துவரும் பொன்னியின் செல்வன் கதாபாத் திரங்களில் சில புறங்கூறுதலை அந்தந்தப் பாத்திரங் களின் உணர்வுகளின் வழி கடுமையாகவும், நகைச்சுவையாகவும், பொறாமையின் வெளிப்பாடாகவும் மிக அழகாக காட்டியிருப்பார் கல்கி அவர்கள். (நந்தினி பெரிய பழுவேட்டையரிடம்...) "மந்திரவாதியை நான் ஏன் அழைக்கிறேன் என்பதை முன்னமே சொல்லியிருக்கிறேன். தாங்கள் மறந்திருந்தால், இன்னொரு தடவையும் சொல்லுகிறேன். பழையாறை யிலுள்ள அந்தப் பெண் பாம்பின் விஷத்தை இறக்கத்தான். நீங்கள் ஆண்மை உள்ள புருஷர்கள். யுத்தகளத்தில் நேருக்கு நேர் நின்று ஆண் பிள்ளைகளோடு போரிடுவீர்கள். 'கேவலம் பெண் பிள்ளைகள்' என்று அலட்சியம் செய்வீர்கள். பெண்பிள்ளைகளுடன் போர் செய்வது உங்களுக்கு அவமானம். ஆனால், நூறு ஆண் பிள்ளைகளைக் காட்டிலும் ஒரு பெண் பிள்ளை அதிகமான தீங்கு செய்துவிடுவாள். பாம்பின் கால் பாம்பு அறியும். அந்தக் குந்தவையின் வஞ்சனையெல்லாம் உங்களுக்குத் தெரியாது, எனக்குத் தெரியும். தங்களையும் என்னையும் சேர்த்து அவள் அவமானப்படுத்தியதைத் தாங்கள் மறந்திருக்கலாம், நான் மறக்க முடியாது. நூறு பெண்களுக்கு மத்தியில் என்னைப் பார்த்து, 'அந்தக் கிழவனுக்குத்தான் சாகப் போகிற சமயத்தில் பெண் மோகம் பிடித்துப் புத்தி கெட்டுப் போய்விட்டது; உன் அறிவு எங்கேயடி போயிற்று? அந்தக் கிழவனைப் போய் ஏன் மணந்துகொண்டாய்? 'என்று கேட்டாளே, அதை நான் மறக்க முடியுமா? 'தேவலோக மோகினியைப் போல் ஜொலிக்கிறாயே? எந்த ராஜகுமாரனும் உன்னை விரும்பி மாலையிட்டுப் பட்டமகிஷியாக வைத்திருப்பானே? போயும் போயும் அந்தக் கிழ எருமை மாட்டைப் போய் கலியாணம் செய்துகொண்டாயே!' என்று அவள் என்னைக் கேட்டதை மறக்க முடியுமா? இந்த உடம்பில் உயிருள்ள வரையில் மறக்க முடியாது!" என்று கூறி நந்தினி விம்மி அழத் தொடங்கினாள். அவளுடைய கண்களில் பொங்கிய கண்ணீர் தாரை தாரையாகக் கன்னங்களின் வழியாகப் பெருகி அவளது மார்பகத்தை நனைத்தது..(ஆதித்த கரிகாலனும் பார்த்திபேந்திரனும்...) “பல்லவா! நீ பெண் குலத்தை வெறுக்கும் துர்ப்பாக்கியசாலி! காதல் என்றால் இன்னதென்று நீ அறியமாட்டாய்! அதனாலேயே இவ்விதம் பேசுகிறாய்." “ஆம்; நான் எந்தப் பெண்ணுடைய கண் வலையிலும் சிக்கியதில்லைதான். ஆனால், தங்கள் அந்தரங்கத்துக் குரிய வந்தியத்தேவன், மஞ்சள் பூசிய முகம் எதைக் கண்டாலும் மயங்கிப் பல்லை இளிப்பவன். ஆகையினாலேயே அவனைத் தங்களுக்கு என்னைக் காட்டிலும் பிடித்திருக்கிறது. இல்லையா, அரசே!" “ஆகா! கடைசியில் வந்தியத்தேவனிடம் வந்துவிட்டாய் அல்லவா? ஏது. இத்தனை நேரம் அவனை மறந்துவிட்டாயே என்று பார்த்தேன்!" "ஆம், அவனைப் பற்றி உண்மையைச் சொன்னால் தங்களுக்குக் கசப்பாகவே இருக்கும். அந்தப் பேச்சை விட்டு விடுகிறேன். " (நந்தினி கந்தமாறனிடம்...) “நன்றாய்த் தெரியும். அதைவிட இன்னும் சில செய்திகளும் தெரியும். ஐயா! தங்கள் குடும்பமும், என் குடும்பமும் மற்றும் பல பெரிய குடும்பங்களும் பெரும் அபாயத்தின் வாசலில் நின்றுவருகின்றன. அதற்குக் காரணம் யார் தெரியுமா? "சொல்லுங்கள், தேவி!" "இன்று மத்தியானம் இங்கு விருந்தாளியாக வந்திருந்தாளே அந்தப் பாதகிதான்!” ''ஐயையோ! இளைய பிராட்டியையா சொல்கிறீர்கள்?'' "அந்த நாகப் பாம்பைத்தான் சொல்கிறேன். பாம்பின் கால் பாம்பு அறியும். குந்தவையின் சூழ்ச்சி இந்த நந்தினிக்குத் தான் தெரியும். உம்முடைய சிநேகிதன் வந்தியத்தேவனை அவள் இலங்கைக்கு அனுப்பியிருக்கிறாள். எதற்காகத் தெரியுமா? மூலிகை கொண்டு வருவதற்கு என்பது பெரும் பொய்! சுந்தர சோழர் பிழைக்க வேண்டுமே என்று அவள் தவித்துக்கொண்டிருக்கவில்லை. அவருக்குப் பிறகு மதுராந்தகரும் பட்டத்துக்கு வரக்கூடாது. ஆதித்த கரிகாலரும் பட்டத்துக்கு வரக்கூடாது. அவளுடைய அருமைத்தம்பி அருள்மொழிவர்மன் வரவேண்டும் என்பது அவள் எண்ணம். அருள்மொழிவர்மன் பட்டத்துக்கு வந்தால் இவள் இஷ்டம் போல் ஆட்டி வைக்கலாம். அப்புறம் சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினி குந்தவை தேவிதான்! சக்கரவர்த்தி யார் தெரியுமா? உங்கள் சிநேகிதன் வந்தியத்தேவன்!" "ஆகா! அப்படியா? இதை எப்படியாவது தடுத்தே தீர வேண்டும். என் தந்தையிடமும் பழுவேட்டரையர் களிடமும் உடனே சொல்லவேண்டும்..." (சுந்தர சோழர் இறந்துவிட்டார் என மிக வேகமானதோர் வதந்தி சோழ நாடு முழுவதும் பரவுவதை கல்கி அவர்கள் அழகாய் குறிப்பிடுவார்) வதந்தி என்னும் மாயா பூதம் எப்படிக் கிளம்புகின்றது, எப்படி அவ்வளவு விரைவில் பிரயாணம் செய்கின்றது என்பது யாராலும் கண்டுபிடிக்க முடியாத மர்மமான காரியம்தான். திடீரென்று இன்னொரு பயங்கரமான வதந்தி மக்களிடையே பரவத் தொடங்கியது. வெகுகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த சுந்தர சோழசக்கரவர்த்தியின் மரணம் நேர்ந்துவிட்டது என்பதுதான் அவ்வதந்தி. "சக்கரவர்த்தி காலமாகி விட்டாராமே? அது உண்மையா?" என்று முதலில் கேட்டார்கள். அன்று அதிகாலையில் வால் நட்சத்திரம் ஒரு நிமிடம் ஜோதி மயமாக ஒளி வீசிவிட்டுப் பூமியை நோக்கி விழுந்து மறைந்ததைப் பார்த்தவர்கள் சிலர், அதையே அத்தாட்சியாகக் கொண்டு சுந்தர சோழர் காலமானதை ஊர்ஜிதம் செய்தார்கள். இது உண்மையாயின், மேலே என்ன நடக்கப் போகிறது? என்பது பற்றிக் கவலையுடன் விவாதிக்கப்பட்டதும் இயல்பேயல்லவா? (மதுராந்தகன் செம்பியன் மாதேவியிடம்...) "அம்மா அதையெல்லாம் ஜனங்கள் வெகு சீக்கிரம் மறந்துவிடுவார்கள். என்னைச் சிங்காதனத்தில் ஏற்றி விட்டால் என்னையே சக்கரவர்த்தி என்று ஒப்புக் கொள்வார்கள். இன்னும் சொல்கிறேன் கேள்! கரிகாலனுடைய மரணத்துக்கு யார் காரணம் தெரியுமா? அருள்மொழிவர்மரின் அருமைச் சிநேகிதன் வந்தியத்தேவன்தான். சம்புவரையர் வீட்டில் கரிகாலன் செத்துக் கிடந்த இடத்தில் வந்தியத்தேவன்தான் இருந்தானாம். சம்புவரையரையும், வந்தியத்தேவனையும் பாதாளச் சிறையில் போட்டிருக்கிறார்கள். தனக்குச் சிம்மாதனம் கிடைக்கும் பொருட்டுத் தமையனைக் கொலை செய்ய ஏற்பாடு செய்தவன் அருள்மொழிவர்மன். இது மட்டும் ஜனங்களுக்குத் தெரியட்டும். அப்புறம் பொன்னியின் செல்வரின் கதி என்ன ஆகிறதென்று பார்க்கலாம்.” கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல் நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம். ஆனால், பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றி குறை கூறுவது தவறு.(தொடரும்...)
பாகம் – 19 - சுசீலா மாணிக்கம்ஓவியம்; பத்மவாசன்மனித வாழ்வின் வெற்றிச் சூத்திரங்களை எளியோரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிதாக்கி தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் நம் தமிழர் பெருமையாம் திருக்குறளின் பத்தொன்பதாம் அதிகாரம் ‘புறங்கூறாமை’.ஒருவர் அவ்விடத்தில் இல்லாதபோது அவரைப் பற்றி இகழ்ந்து பேசுதல் புறங்கூறுதலாகும். கோள்மூட்டுதல் (பொரணி பேசுதல்) சற்றே மாறுபட்டது எனலாம். ஒருவரின் புகழையும் தகுதியையும் மறைக்கும் எண்ணம் கொண்டு அவரைப்பற்றி திரித்துக் கூறுதல் புறம்பேசுதலாம். கோள் சொல்லுதல் என்பது ஒருவரின் சிறு தவறையும் பெரிதாக்கி பிறரிடம் பிரஸ்தாபிப்பது. ஆனால் இவை அனைத்து கெட்ட குணங்களையும் தன்னகத்தே கொண்டு வதந்தி(தீ) என்னும் பெருந்தீயை குடும்ப, சமுதாய உறவுகளில் ஏற்படுத்துவது மிகப் பெரும் சிக்கலை உருவாக்கும் என்பது மட்டும் உறுதி. அறனழீஇ யல்லவை செய்தலின் தீதேபுறனழீஇப் பொய்த்து நகை ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்து பேசிவிட்டு , அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றி பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்துவிட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதை விடக் கொடுமையானது. பொன்னியின் செல்வன் புதினத்தின் கோடிக்கணக்கான தீவிர ரசிகர்களுடன் ஆன்ம தொடர்புகொண்டு நம் கனவிலும் நினைவிலும் எப்போதும் நம்முடனே வாழ்ந்துவரும் பொன்னியின் செல்வன் கதாபாத் திரங்களில் சில புறங்கூறுதலை அந்தந்தப் பாத்திரங் களின் உணர்வுகளின் வழி கடுமையாகவும், நகைச்சுவையாகவும், பொறாமையின் வெளிப்பாடாகவும் மிக அழகாக காட்டியிருப்பார் கல்கி அவர்கள். (நந்தினி பெரிய பழுவேட்டையரிடம்...) "மந்திரவாதியை நான் ஏன் அழைக்கிறேன் என்பதை முன்னமே சொல்லியிருக்கிறேன். தாங்கள் மறந்திருந்தால், இன்னொரு தடவையும் சொல்லுகிறேன். பழையாறை யிலுள்ள அந்தப் பெண் பாம்பின் விஷத்தை இறக்கத்தான். நீங்கள் ஆண்மை உள்ள புருஷர்கள். யுத்தகளத்தில் நேருக்கு நேர் நின்று ஆண் பிள்ளைகளோடு போரிடுவீர்கள். 'கேவலம் பெண் பிள்ளைகள்' என்று அலட்சியம் செய்வீர்கள். பெண்பிள்ளைகளுடன் போர் செய்வது உங்களுக்கு அவமானம். ஆனால், நூறு ஆண் பிள்ளைகளைக் காட்டிலும் ஒரு பெண் பிள்ளை அதிகமான தீங்கு செய்துவிடுவாள். பாம்பின் கால் பாம்பு அறியும். அந்தக் குந்தவையின் வஞ்சனையெல்லாம் உங்களுக்குத் தெரியாது, எனக்குத் தெரியும். தங்களையும் என்னையும் சேர்த்து அவள் அவமானப்படுத்தியதைத் தாங்கள் மறந்திருக்கலாம், நான் மறக்க முடியாது. நூறு பெண்களுக்கு மத்தியில் என்னைப் பார்த்து, 'அந்தக் கிழவனுக்குத்தான் சாகப் போகிற சமயத்தில் பெண் மோகம் பிடித்துப் புத்தி கெட்டுப் போய்விட்டது; உன் அறிவு எங்கேயடி போயிற்று? அந்தக் கிழவனைப் போய் ஏன் மணந்துகொண்டாய்? 'என்று கேட்டாளே, அதை நான் மறக்க முடியுமா? 'தேவலோக மோகினியைப் போல் ஜொலிக்கிறாயே? எந்த ராஜகுமாரனும் உன்னை விரும்பி மாலையிட்டுப் பட்டமகிஷியாக வைத்திருப்பானே? போயும் போயும் அந்தக் கிழ எருமை மாட்டைப் போய் கலியாணம் செய்துகொண்டாயே!' என்று அவள் என்னைக் கேட்டதை மறக்க முடியுமா? இந்த உடம்பில் உயிருள்ள வரையில் மறக்க முடியாது!" என்று கூறி நந்தினி விம்மி அழத் தொடங்கினாள். அவளுடைய கண்களில் பொங்கிய கண்ணீர் தாரை தாரையாகக் கன்னங்களின் வழியாகப் பெருகி அவளது மார்பகத்தை நனைத்தது..(ஆதித்த கரிகாலனும் பார்த்திபேந்திரனும்...) “பல்லவா! நீ பெண் குலத்தை வெறுக்கும் துர்ப்பாக்கியசாலி! காதல் என்றால் இன்னதென்று நீ அறியமாட்டாய்! அதனாலேயே இவ்விதம் பேசுகிறாய்." “ஆம்; நான் எந்தப் பெண்ணுடைய கண் வலையிலும் சிக்கியதில்லைதான். ஆனால், தங்கள் அந்தரங்கத்துக் குரிய வந்தியத்தேவன், மஞ்சள் பூசிய முகம் எதைக் கண்டாலும் மயங்கிப் பல்லை இளிப்பவன். ஆகையினாலேயே அவனைத் தங்களுக்கு என்னைக் காட்டிலும் பிடித்திருக்கிறது. இல்லையா, அரசே!" “ஆகா! கடைசியில் வந்தியத்தேவனிடம் வந்துவிட்டாய் அல்லவா? ஏது. இத்தனை நேரம் அவனை மறந்துவிட்டாயே என்று பார்த்தேன்!" "ஆம், அவனைப் பற்றி உண்மையைச் சொன்னால் தங்களுக்குக் கசப்பாகவே இருக்கும். அந்தப் பேச்சை விட்டு விடுகிறேன். " (நந்தினி கந்தமாறனிடம்...) “நன்றாய்த் தெரியும். அதைவிட இன்னும் சில செய்திகளும் தெரியும். ஐயா! தங்கள் குடும்பமும், என் குடும்பமும் மற்றும் பல பெரிய குடும்பங்களும் பெரும் அபாயத்தின் வாசலில் நின்றுவருகின்றன. அதற்குக் காரணம் யார் தெரியுமா? "சொல்லுங்கள், தேவி!" "இன்று மத்தியானம் இங்கு விருந்தாளியாக வந்திருந்தாளே அந்தப் பாதகிதான்!” ''ஐயையோ! இளைய பிராட்டியையா சொல்கிறீர்கள்?'' "அந்த நாகப் பாம்பைத்தான் சொல்கிறேன். பாம்பின் கால் பாம்பு அறியும். குந்தவையின் சூழ்ச்சி இந்த நந்தினிக்குத் தான் தெரியும். உம்முடைய சிநேகிதன் வந்தியத்தேவனை அவள் இலங்கைக்கு அனுப்பியிருக்கிறாள். எதற்காகத் தெரியுமா? மூலிகை கொண்டு வருவதற்கு என்பது பெரும் பொய்! சுந்தர சோழர் பிழைக்க வேண்டுமே என்று அவள் தவித்துக்கொண்டிருக்கவில்லை. அவருக்குப் பிறகு மதுராந்தகரும் பட்டத்துக்கு வரக்கூடாது. ஆதித்த கரிகாலரும் பட்டத்துக்கு வரக்கூடாது. அவளுடைய அருமைத்தம்பி அருள்மொழிவர்மன் வரவேண்டும் என்பது அவள் எண்ணம். அருள்மொழிவர்மன் பட்டத்துக்கு வந்தால் இவள் இஷ்டம் போல் ஆட்டி வைக்கலாம். அப்புறம் சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினி குந்தவை தேவிதான்! சக்கரவர்த்தி யார் தெரியுமா? உங்கள் சிநேகிதன் வந்தியத்தேவன்!" "ஆகா! அப்படியா? இதை எப்படியாவது தடுத்தே தீர வேண்டும். என் தந்தையிடமும் பழுவேட்டரையர் களிடமும் உடனே சொல்லவேண்டும்..." (சுந்தர சோழர் இறந்துவிட்டார் என மிக வேகமானதோர் வதந்தி சோழ நாடு முழுவதும் பரவுவதை கல்கி அவர்கள் அழகாய் குறிப்பிடுவார்) வதந்தி என்னும் மாயா பூதம் எப்படிக் கிளம்புகின்றது, எப்படி அவ்வளவு விரைவில் பிரயாணம் செய்கின்றது என்பது யாராலும் கண்டுபிடிக்க முடியாத மர்மமான காரியம்தான். திடீரென்று இன்னொரு பயங்கரமான வதந்தி மக்களிடையே பரவத் தொடங்கியது. வெகுகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த சுந்தர சோழசக்கரவர்த்தியின் மரணம் நேர்ந்துவிட்டது என்பதுதான் அவ்வதந்தி. "சக்கரவர்த்தி காலமாகி விட்டாராமே? அது உண்மையா?" என்று முதலில் கேட்டார்கள். அன்று அதிகாலையில் வால் நட்சத்திரம் ஒரு நிமிடம் ஜோதி மயமாக ஒளி வீசிவிட்டுப் பூமியை நோக்கி விழுந்து மறைந்ததைப் பார்த்தவர்கள் சிலர், அதையே அத்தாட்சியாகக் கொண்டு சுந்தர சோழர் காலமானதை ஊர்ஜிதம் செய்தார்கள். இது உண்மையாயின், மேலே என்ன நடக்கப் போகிறது? என்பது பற்றிக் கவலையுடன் விவாதிக்கப்பட்டதும் இயல்பேயல்லவா? (மதுராந்தகன் செம்பியன் மாதேவியிடம்...) "அம்மா அதையெல்லாம் ஜனங்கள் வெகு சீக்கிரம் மறந்துவிடுவார்கள். என்னைச் சிங்காதனத்தில் ஏற்றி விட்டால் என்னையே சக்கரவர்த்தி என்று ஒப்புக் கொள்வார்கள். இன்னும் சொல்கிறேன் கேள்! கரிகாலனுடைய மரணத்துக்கு யார் காரணம் தெரியுமா? அருள்மொழிவர்மரின் அருமைச் சிநேகிதன் வந்தியத்தேவன்தான். சம்புவரையர் வீட்டில் கரிகாலன் செத்துக் கிடந்த இடத்தில் வந்தியத்தேவன்தான் இருந்தானாம். சம்புவரையரையும், வந்தியத்தேவனையும் பாதாளச் சிறையில் போட்டிருக்கிறார்கள். தனக்குச் சிம்மாதனம் கிடைக்கும் பொருட்டுத் தமையனைக் கொலை செய்ய ஏற்பாடு செய்தவன் அருள்மொழிவர்மன். இது மட்டும் ஜனங்களுக்குத் தெரியட்டும். அப்புறம் பொன்னியின் செல்வரின் கதி என்ன ஆகிறதென்று பார்க்கலாம்.” கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல் நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம். ஆனால், பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றி குறை கூறுவது தவறு.(தொடரும்...)