- சுசீலா மாணிக்கம்ஓவியம்: பத்மவாசன்பாகம் - 21எத்தனை யுகங்கள் கடந்தாலும் எக்காலத்துக்கும் சாலப் பொருந்தும் நம் திருக்குறளின் இருபத்தியோராம் அதிகாரம் ‘தீவினையச்சம்’. மனிதன் தன் வாழ்நாளில் கடைபிடிக்க வேண்டியவை - தவிர்க்க வேண்டியவை என்பதாய் பல்வேறு அதிகாரங்களைப் பகுத்துக் கூறியிருக்கும் எம்பெருமான் திருவள்ளுவர் ‘தீவினையச்சம்’ என்றோர் அதிகாரத்திற்கு தலைப் பிட்டுள்ளார் என்றால் தீவினை என்பது எவ்வளவு கொடிது. தீவினைக்கு நாம் எவ்வாறு அச்சம் கொள்ளவேண்டும் என்பதை அடிக்கோட்டிட்டு காட்டவே அச்சம் என்றோர் வார்த்தையை அதிகார தலைப்பில் இணைத்துள்ளார்.தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும் தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானதாக கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்.(பெரிய பழுவேட்டரையர் மாளிகை... லதா மண்டபத்தில் நந்தினியும் மந்திரவாதி ரவிதாஸனும்...) வரும்போதே அவன் முகத்தில் கோபம் கொதித்தது. மலர்ப் படுக்கையில் சாந்த வடிவமாய் அமர்ந்திருந்த நந்தினியைக் கண்டதும் அவனுடைய பூனைக் கண்கள் வெறிக்கனல் வீசின. மஞ்சத்தின் எதிரில் கிடந்த பலகையில் உட்கார்ந்து கொண்டு நந்தினியை உற்றுப் பார்த்துக்கொண்டு “ஹும் ஹரீம் ஹ்ராம், பகவதி! சக்தி! சண்டிகேசுவரி!...." என்று சில மந்திரங்களைச் சொன்னான். ''போதும்! நிறுத்து தாதிப்பெண் வாசற்படியில் உட்கார்ந்த படி தூங்கித் தொலைத்துவிட்டாள் போலிருக்கிறது! சொல்ல வேண்டியதைச் சீக்கிரம் சொல்! அவர் கோட்டைக்குள் வந்து விட்டார்!' என்றாள் நந்தினி. "அடி பாதகி!" என்று ரவிதாஸன் கூறியது, நாகப்பாம்பு சீறுவது போலத் தொனித்தது.'யாரைச் சொன்னாய்?" என்று நந்தினி சாந்தமாகவே கேட்டாள்.''நன்றி கெட்ட நந்தினியைத்தான்! பழுவூர் இளைய ராணியைத்தான்! உன்னைத்தான்!'' என்று ரவிதாஸன் தன் ஒரு கை விரலால் அவளைச் சுட்டிக்காட்டினான். நந்தினி மௌனமாயிருந்தாள்.'பெண்ணே! நினைவில் வைத்திருக்கவேண்டிய சில சம்பவங்களை நீ மறந்துவிட்டாய் போலிருக்கிறது. அவற்றை உனக்கு ஞாபகப்படுத்துகிறேன்'' என்றான் ரவிதாஸன். 'பழைய கதை இப்போது எதற்கு?" என்றாள் நந்தினி. "இப்போது எதற்கு என்றா கேட்கிறாய்? சொல்கிறேன்;ஞாபகப்படுத்திவிட்டுப் பிற்பாடு சொல்கிறேன்" என்றான்ரவிதாஸன், அவனைத் தடுப்பதில் பயனில்லை யென்று கருதியவளைப் போல் நந்தினி ஒரு பெருமூச்சு விட்டு விட்டு, வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். ''ராணி! கேள்! மூன்று வருஷத்துக்கு முன்னால் ஒரு நாள் நடு நிசியில் வைகை நதிக்கரையில் உள்ள மயானத்தில் ஒரு சிதை எரிந்து கொண்டிருந்தது. சாஸ்திரப்படி புரோகிதர் களைக்கொண்டு அந்திமக் கிரியை ஒன்றும் அங்கு நடக்கவில்லை. காட்டில் காய்ந்து கிடந்த கட்டைகளையும், குச்சிகளையும், இலைச் சருகுகளையும் கொண்டு வந்து அச் சிதையை அடுக்கினார்கள். மரத்துக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்த ஓர் உடலைக் கொண்டுவந்து அந்தச் சிதையில் இட்டார்கள். பிறகு தீ மூட்டினார்கள். காட்டுக் கட்டைகளில் தீ நன்றாய்ப் பிடித்துக் கொழுந்து விட்டு எரிந்தது. அப்போது காட்டு நிழலிலிருந்து உன்னைச் சிலர் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார்கள். உன் காலையும் கையையும் கட்டிப் போட்டிருந்தது. உன் வாயில் துணி அடைத்திருந்தது. இன்று அழகாகப் பூ வைத்துக் கொண்டை போட்டுக் கொண்டிருக்கிறாயே, அந்தக் கூந்தல் விரிந்து தரையில் புரண்டு கொண்டிருந்தது. உன்னை அம் மனிதர்கள் ஜுவாலை விட்டு எரிந்து கொண்டிருந்த சிதையில் உயிரோடு போட்டுக் கொளுத்தி விட எண்ணியிருந்தார்கள். 'இன்னும் கொஞ்சம் தீ நன்றாக எரியட்டும்!" என்று அவர்களில் ஒருவன் சொன்னான். உன்னை அங்கேயே போட்டு விட்டு அந்த மனிதர்கள் தனித் தனியே ஒரு பயங்கரமான சபதம் எடுத்துக்கொண்டார்கள். அதை நீ கேட்டுக் கொண்டிருந்தாய். உன் வாயை அடைத்திருந்தார்களே தவிர, கண்ணையும் கட்டவில்லை; காதையும் அடைக்கவில்லை. ஆகையால், பார்த்துக் கொண்டும் கேட்டுக்கொண்டுமிருந்தாய். அவர்கள் அனைவரும் சபதம் கூறி முடித்த பிறகு உன்னை நெருங்கினார்கள். அதுவரை சும்மா இருந்தவள், கட்டுண்டிருந்த உன் கைகளால் ஏதோ சமிக்ஞை செய்ய முயன்றாய்.உன் கண்களை உருட்டி விழித்துப் புருவத்தை நெரித்துக் கஷ்டப்பட்டாய். அவர்களில் ஒருவன் 'இவள் ஏதோ சொல்ல விரும்புகிறாளடா!' என்றான். 'பழைய கதையாகத்தான் இருக்கும். தூக்கிச் சிதையில் போடு' என்றான் இன்னொருவன். இல்லையடா! தீயில் போடுவதற்கு முன்னால் என்னதான் சொல்கிறாள், கேட்டு விடலாம்! வாயிலிருந்து துணியை எடு!' என்றான் மற்றொருவன். அவனே அவர்களுக்குத் தலைவன் ஆனபடியால் உன் வாயிலிருந்து துணியை எடுத்தார்கள். நீ அப்போது என்ன சொன்னாய் என்பது நினைவிருக்கிறதா, பெண்ணே!" என்று ரவிதாஸன் கேட்டுவிட்டு நிறுத்தினான்..நந்தினி மறுமொழி சொல்லவும் இல்லை; அவனைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை. நெஞ்சில் குடிகொண்டிருந்த அருவருப்பையும் பீதியையும் அதே சமயத்தில் பயங்கர சங்கல்பத்தின் உறுதியையும் அவள் முக மண்டலம் காட்டியது. அவளுடைய கரிய கண்களிலிருந்து இரு கண்ணீர்த் துளிகளும் ததும்பி நின்றன. ."பெண்ணே! பேசமாட்டேன் என்கிறாய்! வேண்டாம். அதையும் நானே சொல்லிவிடுகிறேன். அந்த மனிதர்களைப் போலவே நீயும் பழி வாங்கும் விரதம் பூணப்போவதாகச் சொன்னாய். பழி வாங்குவதற்கு அவர்களைக் காட்டிலும் உனக்கே அதிகக் காரணம் உண்டு என்று சத்தியம் செய்தாய்.உன்னுடைய அழகையும் மதியையும் அதற்கே பயன்படுத்துவதாகக் கூறினாய். அவர்களுக்கு உன்னால் முடிந்த அளவு உதவி புரிவதாகவும் சொன்னாய். சபதத்தை நிறைவேற்றியதும் நீயே உன் உயிரை விட்டுவிடத் தீர்மானித்திருப்பதாகவும் ஆணையிட்டுச் சொன்னாய். உன்னை மற்றவர்கள் நம்பவில்லை. ஆனால் நான் நம்பினேன். நம்பி, உன்னைத் தீயில் போட்டு விடாமல் தடுத்தேன். உன் உயிரைத் தப்புவித்தேன். இதெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கிறதா?” என்று ரவிதாஸன் கூறி நிறுத்தினான். நந்தினி சற்றுத் திரும்பி அவனைப் பார்த்து, “ஞாபகம் இருக்கிறதா என்று கேட்கிறாயே? என் நெஞ்சில் அவ்வளவும் தீயினால் எழுதியதுபோல் எழுதி வைத்திருக்கிறதே?” என்றாள். "பின்னர் ஒருநாள் நாம் எல்லோரும் அகண்ட காவேரிக்கரையோரமாகக் காட்டு வழியில் போய்க் கொண்டிருந்தோம். திடீரென்று பின்னால் குதிரை வீரர்கள் வரும் சத்தம் கேட்டது. அவர்கள் போகும் வரையில் நாம் ஒவ்வொருவரும் தனித் தனியாகக் காட்டில் ஒளிந்து கொள்ளத் தீர்மானித்தோம். ஆனால் நீ மட்டும் அத் தீர்மானத்தை மீறி வழியிலேயே நின்றாய். அந்த வீரர்கள் உன்னைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களுடைய தலைவனாகிய பழுவேட்டரையன் உன்னைக் கண்டு மயங்கி உன் மோக வலையில் விழுந்தான். அவனை நீ மணந்தாய், என்னைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் நான் ஏமாந்துவிட்டதாக என்னை இடித்துக் கூறினார்கள். நான் உன்னை விடவில்லை. எப்படியோ ஒரு நாள் உன்னைத் தனியே பிடித்துக்கொண்டேன். துரோகியாகிய உன்னைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட எண்ணினேன். மறுபடியும் நீ உயிர்ப் பிச்சை கேட்டாய். நம்முடைய சபதத்தை நிறைவேற்றுவதற்காகவே இங்கு வந்திருப் பதாகக் கூறினாய். இந்த அரண்மனையில் இருந்தபடியே எங்களுக்கு வேண்டிய உதவியெல்லாம் செய்வதாகச் சத்தியம் செய்தாய். இதெல்லாம் உண்மையா இல்லையா?” என்று கேட்டுவிட்டு நிறுத்தினான் ரவிதாஸன். "இதெல்லாம் உண்மைதான்; யார் இல்லை என்றார்கள்? எதற்காகத் திருப்பித் திருப்பிச் சொல்லுகிறாய்? இப்போது நீ வந்த காரியத்தைச் சொல்லு!” என்றாள் நந்தினி. 'இல்லை, பெண்ணே! உனக்கு ஞாபகம் இல்லை. எல்லாவற்றையும் நீ மறந்துவிட்டாய்! பழுவூர் அரண்மனையின் சுகபோகத்தில் அழுந்தி உன் சபதத்தை மறந்துவிட்டாய்!அறுசுவை உண்டி அருந்தி, ஆடை ஆபரணங்கள் புனைந்து, சப்ரகூட மஞ்சத்தில் பட்டு மெத்தையில் உறங்கி, தந்தப் பல்லக்கில் பிரயாணம் செய்யும் ராணி நீ! உனக்குப் பழைய ஞாபகங்கள் எப்படி இருக்கும்?''''சீச்சீ! இந்த மஞ்சமும், மெத்தையும், ஆடை ஆபரணமும் யாருக்கு வேண்டும்? இந்த அற்ப போகங்களுக்காகவா நான் உயிர்வாழ்கிறேன்? இல்லவே இல்லை!" "அல்லது வழியில் போகிற வாலிபனுடைய சௌந்தரிய வதனத்தைக் கண்டு மயங்கிவிட்டாய் போலும்! புதிதாகக் கொண்ட மையலில் பழைய பழி வாங்கும் எண்ணத்தை மறந்திருக்கலாம் அல்லவா!"நந்தினி சிறிது துணுக்கம் அடைந்தாள். அதை உடனே சமாளித்துக்கொண்டு "பொய்! முழுப் பொய்!” என்றாள்.தன்னைத்தான் காதலனாயின் எனைத்தொன்றுந்துன்னற்க தீவினைப் பால்தன் மீது அன்புள்ளவன் எவ்வளவு சிறிது என்றாலும் சரி,மற்றவர்க்குத் தீமை செய்யலாகாது.நாமும் இனி தன்னைத்தான் காதல னாயின்... (தொடரும்)
- சுசீலா மாணிக்கம்ஓவியம்: பத்மவாசன்பாகம் - 21எத்தனை யுகங்கள் கடந்தாலும் எக்காலத்துக்கும் சாலப் பொருந்தும் நம் திருக்குறளின் இருபத்தியோராம் அதிகாரம் ‘தீவினையச்சம்’. மனிதன் தன் வாழ்நாளில் கடைபிடிக்க வேண்டியவை - தவிர்க்க வேண்டியவை என்பதாய் பல்வேறு அதிகாரங்களைப் பகுத்துக் கூறியிருக்கும் எம்பெருமான் திருவள்ளுவர் ‘தீவினையச்சம்’ என்றோர் அதிகாரத்திற்கு தலைப் பிட்டுள்ளார் என்றால் தீவினை என்பது எவ்வளவு கொடிது. தீவினைக்கு நாம் எவ்வாறு அச்சம் கொள்ளவேண்டும் என்பதை அடிக்கோட்டிட்டு காட்டவே அச்சம் என்றோர் வார்த்தையை அதிகார தலைப்பில் இணைத்துள்ளார்.தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும் தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானதாக கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்.(பெரிய பழுவேட்டரையர் மாளிகை... லதா மண்டபத்தில் நந்தினியும் மந்திரவாதி ரவிதாஸனும்...) வரும்போதே அவன் முகத்தில் கோபம் கொதித்தது. மலர்ப் படுக்கையில் சாந்த வடிவமாய் அமர்ந்திருந்த நந்தினியைக் கண்டதும் அவனுடைய பூனைக் கண்கள் வெறிக்கனல் வீசின. மஞ்சத்தின் எதிரில் கிடந்த பலகையில் உட்கார்ந்து கொண்டு நந்தினியை உற்றுப் பார்த்துக்கொண்டு “ஹும் ஹரீம் ஹ்ராம், பகவதி! சக்தி! சண்டிகேசுவரி!...." என்று சில மந்திரங்களைச் சொன்னான். ''போதும்! நிறுத்து தாதிப்பெண் வாசற்படியில் உட்கார்ந்த படி தூங்கித் தொலைத்துவிட்டாள் போலிருக்கிறது! சொல்ல வேண்டியதைச் சீக்கிரம் சொல்! அவர் கோட்டைக்குள் வந்து விட்டார்!' என்றாள் நந்தினி. "அடி பாதகி!" என்று ரவிதாஸன் கூறியது, நாகப்பாம்பு சீறுவது போலத் தொனித்தது.'யாரைச் சொன்னாய்?" என்று நந்தினி சாந்தமாகவே கேட்டாள்.''நன்றி கெட்ட நந்தினியைத்தான்! பழுவூர் இளைய ராணியைத்தான்! உன்னைத்தான்!'' என்று ரவிதாஸன் தன் ஒரு கை விரலால் அவளைச் சுட்டிக்காட்டினான். நந்தினி மௌனமாயிருந்தாள்.'பெண்ணே! நினைவில் வைத்திருக்கவேண்டிய சில சம்பவங்களை நீ மறந்துவிட்டாய் போலிருக்கிறது. அவற்றை உனக்கு ஞாபகப்படுத்துகிறேன்'' என்றான் ரவிதாஸன். 'பழைய கதை இப்போது எதற்கு?" என்றாள் நந்தினி. "இப்போது எதற்கு என்றா கேட்கிறாய்? சொல்கிறேன்;ஞாபகப்படுத்திவிட்டுப் பிற்பாடு சொல்கிறேன்" என்றான்ரவிதாஸன், அவனைத் தடுப்பதில் பயனில்லை யென்று கருதியவளைப் போல் நந்தினி ஒரு பெருமூச்சு விட்டு விட்டு, வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். ''ராணி! கேள்! மூன்று வருஷத்துக்கு முன்னால் ஒரு நாள் நடு நிசியில் வைகை நதிக்கரையில் உள்ள மயானத்தில் ஒரு சிதை எரிந்து கொண்டிருந்தது. சாஸ்திரப்படி புரோகிதர் களைக்கொண்டு அந்திமக் கிரியை ஒன்றும் அங்கு நடக்கவில்லை. காட்டில் காய்ந்து கிடந்த கட்டைகளையும், குச்சிகளையும், இலைச் சருகுகளையும் கொண்டு வந்து அச் சிதையை அடுக்கினார்கள். மரத்துக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்த ஓர் உடலைக் கொண்டுவந்து அந்தச் சிதையில் இட்டார்கள். பிறகு தீ மூட்டினார்கள். காட்டுக் கட்டைகளில் தீ நன்றாய்ப் பிடித்துக் கொழுந்து விட்டு எரிந்தது. அப்போது காட்டு நிழலிலிருந்து உன்னைச் சிலர் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார்கள். உன் காலையும் கையையும் கட்டிப் போட்டிருந்தது. உன் வாயில் துணி அடைத்திருந்தது. இன்று அழகாகப் பூ வைத்துக் கொண்டை போட்டுக் கொண்டிருக்கிறாயே, அந்தக் கூந்தல் விரிந்து தரையில் புரண்டு கொண்டிருந்தது. உன்னை அம் மனிதர்கள் ஜுவாலை விட்டு எரிந்து கொண்டிருந்த சிதையில் உயிரோடு போட்டுக் கொளுத்தி விட எண்ணியிருந்தார்கள். 'இன்னும் கொஞ்சம் தீ நன்றாக எரியட்டும்!" என்று அவர்களில் ஒருவன் சொன்னான். உன்னை அங்கேயே போட்டு விட்டு அந்த மனிதர்கள் தனித் தனியே ஒரு பயங்கரமான சபதம் எடுத்துக்கொண்டார்கள். அதை நீ கேட்டுக் கொண்டிருந்தாய். உன் வாயை அடைத்திருந்தார்களே தவிர, கண்ணையும் கட்டவில்லை; காதையும் அடைக்கவில்லை. ஆகையால், பார்த்துக் கொண்டும் கேட்டுக்கொண்டுமிருந்தாய். அவர்கள் அனைவரும் சபதம் கூறி முடித்த பிறகு உன்னை நெருங்கினார்கள். அதுவரை சும்மா இருந்தவள், கட்டுண்டிருந்த உன் கைகளால் ஏதோ சமிக்ஞை செய்ய முயன்றாய்.உன் கண்களை உருட்டி விழித்துப் புருவத்தை நெரித்துக் கஷ்டப்பட்டாய். அவர்களில் ஒருவன் 'இவள் ஏதோ சொல்ல விரும்புகிறாளடா!' என்றான். 'பழைய கதையாகத்தான் இருக்கும். தூக்கிச் சிதையில் போடு' என்றான் இன்னொருவன். இல்லையடா! தீயில் போடுவதற்கு முன்னால் என்னதான் சொல்கிறாள், கேட்டு விடலாம்! வாயிலிருந்து துணியை எடு!' என்றான் மற்றொருவன். அவனே அவர்களுக்குத் தலைவன் ஆனபடியால் உன் வாயிலிருந்து துணியை எடுத்தார்கள். நீ அப்போது என்ன சொன்னாய் என்பது நினைவிருக்கிறதா, பெண்ணே!" என்று ரவிதாஸன் கேட்டுவிட்டு நிறுத்தினான்..நந்தினி மறுமொழி சொல்லவும் இல்லை; அவனைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை. நெஞ்சில் குடிகொண்டிருந்த அருவருப்பையும் பீதியையும் அதே சமயத்தில் பயங்கர சங்கல்பத்தின் உறுதியையும் அவள் முக மண்டலம் காட்டியது. அவளுடைய கரிய கண்களிலிருந்து இரு கண்ணீர்த் துளிகளும் ததும்பி நின்றன. ."பெண்ணே! பேசமாட்டேன் என்கிறாய்! வேண்டாம். அதையும் நானே சொல்லிவிடுகிறேன். அந்த மனிதர்களைப் போலவே நீயும் பழி வாங்கும் விரதம் பூணப்போவதாகச் சொன்னாய். பழி வாங்குவதற்கு அவர்களைக் காட்டிலும் உனக்கே அதிகக் காரணம் உண்டு என்று சத்தியம் செய்தாய்.உன்னுடைய அழகையும் மதியையும் அதற்கே பயன்படுத்துவதாகக் கூறினாய். அவர்களுக்கு உன்னால் முடிந்த அளவு உதவி புரிவதாகவும் சொன்னாய். சபதத்தை நிறைவேற்றியதும் நீயே உன் உயிரை விட்டுவிடத் தீர்மானித்திருப்பதாகவும் ஆணையிட்டுச் சொன்னாய். உன்னை மற்றவர்கள் நம்பவில்லை. ஆனால் நான் நம்பினேன். நம்பி, உன்னைத் தீயில் போட்டு விடாமல் தடுத்தேன். உன் உயிரைத் தப்புவித்தேன். இதெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கிறதா?” என்று ரவிதாஸன் கூறி நிறுத்தினான். நந்தினி சற்றுத் திரும்பி அவனைப் பார்த்து, “ஞாபகம் இருக்கிறதா என்று கேட்கிறாயே? என் நெஞ்சில் அவ்வளவும் தீயினால் எழுதியதுபோல் எழுதி வைத்திருக்கிறதே?” என்றாள். "பின்னர் ஒருநாள் நாம் எல்லோரும் அகண்ட காவேரிக்கரையோரமாகக் காட்டு வழியில் போய்க் கொண்டிருந்தோம். திடீரென்று பின்னால் குதிரை வீரர்கள் வரும் சத்தம் கேட்டது. அவர்கள் போகும் வரையில் நாம் ஒவ்வொருவரும் தனித் தனியாகக் காட்டில் ஒளிந்து கொள்ளத் தீர்மானித்தோம். ஆனால் நீ மட்டும் அத் தீர்மானத்தை மீறி வழியிலேயே நின்றாய். அந்த வீரர்கள் உன்னைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களுடைய தலைவனாகிய பழுவேட்டரையன் உன்னைக் கண்டு மயங்கி உன் மோக வலையில் விழுந்தான். அவனை நீ மணந்தாய், என்னைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் நான் ஏமாந்துவிட்டதாக என்னை இடித்துக் கூறினார்கள். நான் உன்னை விடவில்லை. எப்படியோ ஒரு நாள் உன்னைத் தனியே பிடித்துக்கொண்டேன். துரோகியாகிய உன்னைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட எண்ணினேன். மறுபடியும் நீ உயிர்ப் பிச்சை கேட்டாய். நம்முடைய சபதத்தை நிறைவேற்றுவதற்காகவே இங்கு வந்திருப் பதாகக் கூறினாய். இந்த அரண்மனையில் இருந்தபடியே எங்களுக்கு வேண்டிய உதவியெல்லாம் செய்வதாகச் சத்தியம் செய்தாய். இதெல்லாம் உண்மையா இல்லையா?” என்று கேட்டுவிட்டு நிறுத்தினான் ரவிதாஸன். "இதெல்லாம் உண்மைதான்; யார் இல்லை என்றார்கள்? எதற்காகத் திருப்பித் திருப்பிச் சொல்லுகிறாய்? இப்போது நீ வந்த காரியத்தைச் சொல்லு!” என்றாள் நந்தினி. 'இல்லை, பெண்ணே! உனக்கு ஞாபகம் இல்லை. எல்லாவற்றையும் நீ மறந்துவிட்டாய்! பழுவூர் அரண்மனையின் சுகபோகத்தில் அழுந்தி உன் சபதத்தை மறந்துவிட்டாய்!அறுசுவை உண்டி அருந்தி, ஆடை ஆபரணங்கள் புனைந்து, சப்ரகூட மஞ்சத்தில் பட்டு மெத்தையில் உறங்கி, தந்தப் பல்லக்கில் பிரயாணம் செய்யும் ராணி நீ! உனக்குப் பழைய ஞாபகங்கள் எப்படி இருக்கும்?''''சீச்சீ! இந்த மஞ்சமும், மெத்தையும், ஆடை ஆபரணமும் யாருக்கு வேண்டும்? இந்த அற்ப போகங்களுக்காகவா நான் உயிர்வாழ்கிறேன்? இல்லவே இல்லை!" "அல்லது வழியில் போகிற வாலிபனுடைய சௌந்தரிய வதனத்தைக் கண்டு மயங்கிவிட்டாய் போலும்! புதிதாகக் கொண்ட மையலில் பழைய பழி வாங்கும் எண்ணத்தை மறந்திருக்கலாம் அல்லவா!"நந்தினி சிறிது துணுக்கம் அடைந்தாள். அதை உடனே சமாளித்துக்கொண்டு "பொய்! முழுப் பொய்!” என்றாள்.தன்னைத்தான் காதலனாயின் எனைத்தொன்றுந்துன்னற்க தீவினைப் பால்தன் மீது அன்புள்ளவன் எவ்வளவு சிறிது என்றாலும் சரி,மற்றவர்க்குத் தீமை செய்யலாகாது.நாமும் இனி தன்னைத்தான் காதல னாயின்... (தொடரும்)