எங்கள் தலைமை அதிகாரி சக்கரவர்த்தி, “திருப்பதியில் விமான நிலையம் தொடங்குவதாகவும், அதற்காக அனுப்பப்படுபவர்களின் பெயர் பட்டியலில் உங்கள் பெயரும் இருக்கிறது“ என்றும் என்னிடம் சொன்னார். மாற்றல் கடிதமும் அதனுடன் ஒப்புதல் படிவமும் இன்னும் சில தினங்களில் வந்து சேரும். அவற்றைக் கையெழுத்துப் போட்டு அனுப்பிவிட்டு இங்கே இரண்டு நாள் திருப்பதி சம்பந்தமான மீட்டிங்குக்கு வந்து சேர் என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார். இந்தியன் ஏர்லைன்ஸில் யூனியன் மிகவும் ஸ்ட்ராங். பணியாளர்கள் சம்மதம் இல்லாமல் எதுவும் செய்யக் கூடாது. ஆகவே, “நான் சம்மதம் இல்லை” என்று தெரிவித்துவிட்டால் எனக்கு திருப்பதிக்குப் போக வேண்டிய அவசியம் இருக்காது. கோவை எனக்கு பிடித்திருந்தது. மேலும் வாரா வாரம் ஊட்டியில் என் வீட்டிற்குச் செல்லும் வசதியும் இருந்தது. இதுவரை நான் டில்லி, மீரட் இன்டர்வியூ பயணங்கள் தவிர, தமிழ்நாட்டைத் தாண்டி எங்கேயும் சென்றதில்லை. திருப்பதி கோவிலுக்கும் இதுவரை சென்றதில்லை. அதனால், ‘இந்த சந்தர்ப்பத்தை இழக்க வேண்டாம்‘ என்றும் இருந்தது. முக்கியக் காரணம் திருப்பதி பெருமாள் மட்டுமல்ல, “புது விமான நிலையம் எப்படி ஆரம்பிப்பார்கள்“ என்று அறிந்து கொள்ளும் ஆவலும்தான். எங்கள் கோவை தொழிலதிபர் பயணிகள் எல்லோரும் திருப்பதி போகும் பழக்கம் உள்ளவர்கள். ஆதலால் என் திருப்பதி மாற்றலைப் பற்றிக் கேள்விப்பட்ட ஒவ்வொருவரும் என்னை ‘அதிர்ஷ்டசாலி‘ என்றுதான் சொன்னார்கள். என் சீனியர்களும் அப்பாடா இவன் திருப்பதி போய்விடுவான் என்று நிம்மதியாக இருந்தார்கள். அன்று சிறு மனக்குழப்பத்துடன் ஏர்போர்ட்டுக்குப் போனேன். பெங்களூரிலிருந்து வந்த எங்கள் விமானத்திலிருந்து விண்வெளி வீரர்கள் போல் உடை அணிந்த நான்கு விமானப்படை பைலட்டுகள் இறங்கினார்கள். பக்கத்தில் விமானப்படை தளமான சூலூர் ஏர் பேஸ் இருந்தது. அங்கு விமானங்களை ரிப்பேர் செய்வார்கள் என்பதும் தெரியும். முக்கியமாக 1971 பாகிஸ்தான் யுத்தம் முடிந்து பங்களாதேஷ் பிறந்து சில மாதங்களே ஆகியிருந்ததால் நிறைய விமானங்கள் இங்கு ரிப்பேருக்கு வருவதுண்டு. இந்த பைலட்டுகள் அந்த விமானங்களைக் கொண்டு வந்து விட்டுவிட்டு எங்கள் விமானங்களில் போவார்கள். அதேபோல எங்கள் விமானங்களில் வந்து இறங்கி தங்கள் விமானங்களை எடுத்துக் கொண்டும் போவார்கள். யுத்தத்தில் நாம் 45 விமானங்களுக்கு மேல் இழந்து விட்டோம்... பாகிஸ்தான் 75 விமானங்கள் இழந்தது என்பது வேறு விஷயம். என்றாலும், நம் விமானங்கள் இனிமேல் மேம்படுத்தப்பட வேண்டும் என்று ஒரு பெரிய திட்டத்தையும் ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந்தார்கள்..சூலூர் விமான நிலையம் இந்தியாவிலேயே பெரிய இரண்டாவது விமானப்படைத்தளம். முதல் விமான படைத்தளம் டெல்லி அருகில் உள்ள ஹிண்டன். இந்த சூலூர் விமானப் படைத்தளம் 1940 இல் இந்திய கப்பற்படைக்காகக் கட்டப்பட்டது. இங்கிருந்துதான் விமானங்கள் கிளம்பி கடற்கரையைக் கண்காணித்து விட்டு வந்தன. பிறகு பல வருடங்கள் கழித்து 1955ல் இது விமானப்படைத்தளமாக மாற்றப்பட்டது. கப்பல் படை விமான தளத்தை கடல்கரையிலேயே கொச்சி மற்றும் கோவாவுக்கு மாற்றிவிட்டார்கள். 1969 இல் சூலூர் MIG 21 சூப்பர்சானிக் விமானங்களை ரிப்பேர் செய்யும் தளமாக மாறியது. பெரிய விமானங்களான ஏ என் 32 MI ஹெலிகாப்டர் ஆகிய இரண்டுதான் இங்கே நிறுத்தப்பட்டு இருக்கும். மற்றபடி ரிப்பேருக்காக வரும் MIG 21 அவ்வப்போது வந்து போகும்.அதனால் மோட்டார் சைக்கிள், கார் ரேஸ் மற்றும் பயணிகள் விமானப் போக்குவரத்தும் அவ்வப்போது நடக்கும். எங்கள் பீளமேடு விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கும் போதெல்லாம் இங்குதான் எங்கள் விமானமும் இறங்கும். இரண்டு விமான நிலையங்களிலும் ரேடார் போன்ற கருவிகள் கிடையாது. ரேடியோ அலைகள் மூலம் இயங்கும் ஒரு சில கருவிகள் மட்டும்தான் உண்டு. இரவு நேரங்களில் விமானங்கள் வந்து போக விமான ஓடுபாதையில் விளக்குகள் முதலியவை இருக்கும்.. விமானத்தை அனுப்பிவிட்டு என் ஆபீசுக்குள் நுழைந்தபோது அங்கே நான்கு விமானப்படை பைலட்டுகளும் தங்கள் வண்டி வருவதற்கு தாமதமானதால் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் போய் வழக்கம் போலப் பேச்சுக் கொடுத்தேன். ‘திருப்பதி விமான நிலையத்துக்கு என்னை மாற்றி இருக்கிறார்கள்’ என்று பேச்சுவாக்கில் சொன்னபோது, எல்லோரும் ஒரே குரலில், “ஆகா, எவ்வளவு பாக்கியம் செய்திருக்கிறீர்கள்” என்று சொல்லவே எனக்கு வியப்பு மிகுதியானது. பொதுவாக பைலட்டுகள் தெய்வ பக்தி மிக்கவர்களாகவே இருப்பார்கள். நீங்கள் வாழ்வில் ஒருமுறையாவது விமானத்தில் அந்தரத்தில் தன்னந்தனியாக அமர்ந்திருக்கும்போது விமானத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் எப்பேர்ப்பட்ட நாத்திகனும் பக்திமானாகவே மாறிவிடுவான். அரட்டை அடித்துக் கொண்டிருக்கும்போதே அவர்களது வண்டி வந்துவிட்டது... நால்வரும் ஒருவர்பின் ஒருவராக என் முதுகில் தட்டிக் கொடுத்து “லக்கி மேன்” என்று சொல்லிவிட்டு வண்டியில் ஏறப்போனார்கள்..ஒரு விமானி மட்டும் என்னிடம் சம்பந்தம் இல்லாமல் நாளைக் காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருப்பீர்கள் என்று கேட்டார் பொதுவாக 5 மணிக்கு எழுந்து விடும் வழக்கம் உண்டு என்பதால் அதிகாலை ஐந்து மணிக்கு மேல் எழுந்திருப்பேன் என்றேன். “நாளை அதற்கு முன்பாக உங்களை எழுப்பி விடுகிறேன்“ என்று சொல்லிவிட்டுப் போனார். எனக்கு அது புரியவில்லை. ‘திருப்பதிக்குப் போவதா வேண்டாமா‘ என்ற குழப்பத்தில் இருந்ததால் வேறு எந்த சிந்தனையும் இல்லை. அடுத்த நாள் காலை 4 மணிக்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த என்னை ஒரு பேரிடிச்சத்தம் உலுக்கி எழுப்பியது. எங்கள் விடுதிக் கட்டிடமே கிடுகிடுவென ஆடியது. எல்லோரும் அலறியடித்துக் கொண்டு அவரவர்கள் அறையில் இருந்து வெளியே வந்து “பூமி அதிர்ச்சி பூமி அதிர்ச்சி” என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள். (தொடரும்)
எங்கள் தலைமை அதிகாரி சக்கரவர்த்தி, “திருப்பதியில் விமான நிலையம் தொடங்குவதாகவும், அதற்காக அனுப்பப்படுபவர்களின் பெயர் பட்டியலில் உங்கள் பெயரும் இருக்கிறது“ என்றும் என்னிடம் சொன்னார். மாற்றல் கடிதமும் அதனுடன் ஒப்புதல் படிவமும் இன்னும் சில தினங்களில் வந்து சேரும். அவற்றைக் கையெழுத்துப் போட்டு அனுப்பிவிட்டு இங்கே இரண்டு நாள் திருப்பதி சம்பந்தமான மீட்டிங்குக்கு வந்து சேர் என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார். இந்தியன் ஏர்லைன்ஸில் யூனியன் மிகவும் ஸ்ட்ராங். பணியாளர்கள் சம்மதம் இல்லாமல் எதுவும் செய்யக் கூடாது. ஆகவே, “நான் சம்மதம் இல்லை” என்று தெரிவித்துவிட்டால் எனக்கு திருப்பதிக்குப் போக வேண்டிய அவசியம் இருக்காது. கோவை எனக்கு பிடித்திருந்தது. மேலும் வாரா வாரம் ஊட்டியில் என் வீட்டிற்குச் செல்லும் வசதியும் இருந்தது. இதுவரை நான் டில்லி, மீரட் இன்டர்வியூ பயணங்கள் தவிர, தமிழ்நாட்டைத் தாண்டி எங்கேயும் சென்றதில்லை. திருப்பதி கோவிலுக்கும் இதுவரை சென்றதில்லை. அதனால், ‘இந்த சந்தர்ப்பத்தை இழக்க வேண்டாம்‘ என்றும் இருந்தது. முக்கியக் காரணம் திருப்பதி பெருமாள் மட்டுமல்ல, “புது விமான நிலையம் எப்படி ஆரம்பிப்பார்கள்“ என்று அறிந்து கொள்ளும் ஆவலும்தான். எங்கள் கோவை தொழிலதிபர் பயணிகள் எல்லோரும் திருப்பதி போகும் பழக்கம் உள்ளவர்கள். ஆதலால் என் திருப்பதி மாற்றலைப் பற்றிக் கேள்விப்பட்ட ஒவ்வொருவரும் என்னை ‘அதிர்ஷ்டசாலி‘ என்றுதான் சொன்னார்கள். என் சீனியர்களும் அப்பாடா இவன் திருப்பதி போய்விடுவான் என்று நிம்மதியாக இருந்தார்கள். அன்று சிறு மனக்குழப்பத்துடன் ஏர்போர்ட்டுக்குப் போனேன். பெங்களூரிலிருந்து வந்த எங்கள் விமானத்திலிருந்து விண்வெளி வீரர்கள் போல் உடை அணிந்த நான்கு விமானப்படை பைலட்டுகள் இறங்கினார்கள். பக்கத்தில் விமானப்படை தளமான சூலூர் ஏர் பேஸ் இருந்தது. அங்கு விமானங்களை ரிப்பேர் செய்வார்கள் என்பதும் தெரியும். முக்கியமாக 1971 பாகிஸ்தான் யுத்தம் முடிந்து பங்களாதேஷ் பிறந்து சில மாதங்களே ஆகியிருந்ததால் நிறைய விமானங்கள் இங்கு ரிப்பேருக்கு வருவதுண்டு. இந்த பைலட்டுகள் அந்த விமானங்களைக் கொண்டு வந்து விட்டுவிட்டு எங்கள் விமானங்களில் போவார்கள். அதேபோல எங்கள் விமானங்களில் வந்து இறங்கி தங்கள் விமானங்களை எடுத்துக் கொண்டும் போவார்கள். யுத்தத்தில் நாம் 45 விமானங்களுக்கு மேல் இழந்து விட்டோம்... பாகிஸ்தான் 75 விமானங்கள் இழந்தது என்பது வேறு விஷயம். என்றாலும், நம் விமானங்கள் இனிமேல் மேம்படுத்தப்பட வேண்டும் என்று ஒரு பெரிய திட்டத்தையும் ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந்தார்கள்..சூலூர் விமான நிலையம் இந்தியாவிலேயே பெரிய இரண்டாவது விமானப்படைத்தளம். முதல் விமான படைத்தளம் டெல்லி அருகில் உள்ள ஹிண்டன். இந்த சூலூர் விமானப் படைத்தளம் 1940 இல் இந்திய கப்பற்படைக்காகக் கட்டப்பட்டது. இங்கிருந்துதான் விமானங்கள் கிளம்பி கடற்கரையைக் கண்காணித்து விட்டு வந்தன. பிறகு பல வருடங்கள் கழித்து 1955ல் இது விமானப்படைத்தளமாக மாற்றப்பட்டது. கப்பல் படை விமான தளத்தை கடல்கரையிலேயே கொச்சி மற்றும் கோவாவுக்கு மாற்றிவிட்டார்கள். 1969 இல் சூலூர் MIG 21 சூப்பர்சானிக் விமானங்களை ரிப்பேர் செய்யும் தளமாக மாறியது. பெரிய விமானங்களான ஏ என் 32 MI ஹெலிகாப்டர் ஆகிய இரண்டுதான் இங்கே நிறுத்தப்பட்டு இருக்கும். மற்றபடி ரிப்பேருக்காக வரும் MIG 21 அவ்வப்போது வந்து போகும்.அதனால் மோட்டார் சைக்கிள், கார் ரேஸ் மற்றும் பயணிகள் விமானப் போக்குவரத்தும் அவ்வப்போது நடக்கும். எங்கள் பீளமேடு விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கும் போதெல்லாம் இங்குதான் எங்கள் விமானமும் இறங்கும். இரண்டு விமான நிலையங்களிலும் ரேடார் போன்ற கருவிகள் கிடையாது. ரேடியோ அலைகள் மூலம் இயங்கும் ஒரு சில கருவிகள் மட்டும்தான் உண்டு. இரவு நேரங்களில் விமானங்கள் வந்து போக விமான ஓடுபாதையில் விளக்குகள் முதலியவை இருக்கும்.. விமானத்தை அனுப்பிவிட்டு என் ஆபீசுக்குள் நுழைந்தபோது அங்கே நான்கு விமானப்படை பைலட்டுகளும் தங்கள் வண்டி வருவதற்கு தாமதமானதால் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் போய் வழக்கம் போலப் பேச்சுக் கொடுத்தேன். ‘திருப்பதி விமான நிலையத்துக்கு என்னை மாற்றி இருக்கிறார்கள்’ என்று பேச்சுவாக்கில் சொன்னபோது, எல்லோரும் ஒரே குரலில், “ஆகா, எவ்வளவு பாக்கியம் செய்திருக்கிறீர்கள்” என்று சொல்லவே எனக்கு வியப்பு மிகுதியானது. பொதுவாக பைலட்டுகள் தெய்வ பக்தி மிக்கவர்களாகவே இருப்பார்கள். நீங்கள் வாழ்வில் ஒருமுறையாவது விமானத்தில் அந்தரத்தில் தன்னந்தனியாக அமர்ந்திருக்கும்போது விமானத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் எப்பேர்ப்பட்ட நாத்திகனும் பக்திமானாகவே மாறிவிடுவான். அரட்டை அடித்துக் கொண்டிருக்கும்போதே அவர்களது வண்டி வந்துவிட்டது... நால்வரும் ஒருவர்பின் ஒருவராக என் முதுகில் தட்டிக் கொடுத்து “லக்கி மேன்” என்று சொல்லிவிட்டு வண்டியில் ஏறப்போனார்கள்..ஒரு விமானி மட்டும் என்னிடம் சம்பந்தம் இல்லாமல் நாளைக் காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருப்பீர்கள் என்று கேட்டார் பொதுவாக 5 மணிக்கு எழுந்து விடும் வழக்கம் உண்டு என்பதால் அதிகாலை ஐந்து மணிக்கு மேல் எழுந்திருப்பேன் என்றேன். “நாளை அதற்கு முன்பாக உங்களை எழுப்பி விடுகிறேன்“ என்று சொல்லிவிட்டுப் போனார். எனக்கு அது புரியவில்லை. ‘திருப்பதிக்குப் போவதா வேண்டாமா‘ என்ற குழப்பத்தில் இருந்ததால் வேறு எந்த சிந்தனையும் இல்லை. அடுத்த நாள் காலை 4 மணிக்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த என்னை ஒரு பேரிடிச்சத்தம் உலுக்கி எழுப்பியது. எங்கள் விடுதிக் கட்டிடமே கிடுகிடுவென ஆடியது. எல்லோரும் அலறியடித்துக் கொண்டு அவரவர்கள் அறையில் இருந்து வெளியே வந்து “பூமி அதிர்ச்சி பூமி அதிர்ச்சி” என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள். (தொடரும்)