ஏழு மலையில் ஐந்து தரிசனம்!

ஆன்மீக செய்தி
ஏழு மலை
ஏழு மலை
ஆர்.ஜெயலட்சுமி

ஆர். ஜெயலட்சுமி திருநெல்வேலி ஊர்.மங்கையர் மலரின் முப்பது வருட வாசகியும் எழுத்தாளரும் நான். எனது அம்மா முதலில் மங்கையர் மலரில் எழுதி வந்தவர் அதை தொடர்ந்து நானும் எழுதுகிறேன்

Updated on
  • திருப்பதியில் பெருமாள் ஐந்து நிலைகளில் காட்சியளிக்கிறார். மூலவர்,  மலையப்பர், உக்ரசீனிவாசர், போக சீனிவாசர், கொலுவு சீனிவாசர்  என்னும் இவர்களை ‘பஞ்ச பேரர்கள் என்பர்.

  • மூலவர் கருவறையில் நின்ற கோலத்தில் சங்கு சக்கரம் ஏந்திய நிலையில் இருக்கிறார். இவரே கோயிலின் பிரதான மூர்த்தி.

  • ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருள்பவர் உற்சவர் மலையப்பர். தினமும் இவர் கல்யாண கோலத்தில் காட்சியளிப்பார். ‘மலைக்கினிய பெருமாள்’ என்றும் இவருக்குப் பெயருண்டு.

 பெருமான்
பெருமான்
  • உக்ர சீனிவாசர் ஆண்டுக்கொருமுறை கார்த்திகை துவாதசியன்று அதிகாலையில் பவனி வருவார். இவரை மற்ற நாட்களில் பக்தர்கள் தரிசிக்க முடியாது.

  • போக சீனிவாசர் வெள்ளியால் செய்யப்பட்டவர். இவர் அன்றாட அபிஷேகத்திற்காக எழுந்தருள்வார்.

திருப்பதி பெருமாள்
திருப்பதி பெருமாள்
  • கோயிலில் நடக்கும் அன்றாட வரவு, செலவு கணக்கை அதிகாரிகள் சமர்ப்பிக்கும்போது அதை ஏற்பவர் கொலுவு சீனிவாசர்.

  • திருப்பதி ஏழுமலையில் மீனாக பிறக்க ஆசைப்பட்டவர் குலசேகராழ்வார்.

  • திருப்பதி வெங்கடாஜலபதி பூலோகத்தில் அவதரித்த நாள் புரட்டாசி திருவோணம்.

logo
Kalki Online
kalkionline.com