ஜூலை 1: தேசிய மருத்துவர்கள் தினம் - உயிர் கொடுக்கும் உறவுகளுக்கு ஒரு சல்யூட்!

ஜூலை 1: தேசிய மருத்துவர்கள் தினம்
National doctor's day
National doctor's day
Published on

மனித வாழ்வில் முக்கியமான அம்சங்களான, மாதா ,பிதா, குரு, தெய்வம் என்பதுபோல மருத்துவர்களும் பெரும் பங்களிப்பை மேற்கொண்டு வருவது உலகறிந்த விஷயமே !        

அந்த காலத்தில் சாதாரணமாக உடல் நலம் சரியில்லாமல்  போனால் தாயாா் உடனடியாக அவசர சிகிச்சையாக மிளகு, சீரகம், இஞ்சி இவற்றை வானலியில் போட்டு சீனி சோ்த்து கருக வறுத்து அதைப்பொடியாக்கி கொதிக்கவிட்டு வடிகட்டி சொரசம் தயாா்செய்து கொடுப்பாா்கள். ஒரு மணிநேரத்தில் வியர்த்துவிட்டு, சுரம் வந்த வழியே போய் விடும்.                       

அதேபோல குழந்தைகளுக்கு வயிறு உபாதை வந்து, உப்புசம் ஏற்பட்டால் பிள்ளை வளா்ப்பான் எனும் வசம்பை தணலில் வாட்டி வயிற்றில் குழைத்துப்போட மாந்தம் நோய் வரவே வராது.        இப்படி இயற்கை மருத்துவ முறைகளை பட்டியலே போடலாம்.     

அந்தக்கால உணவு முறைகள் அப்படி ஒரு ஊட்டத்தைத் தந்தன. நாளடைவில் விஞ்ஞானம் வளா்ந்து நோய்களும் பெருகிடவே மருத்துவம் பெருகியது. இதுபோன்ற  நிலையில் மருத்துவர்கள் பங்களிப்புடன் நோய்களுக்கான தீா்வு காணப்பட்டது. உயிா்காக்கும் மருத்துவர்களின் பொறுப்பு  , சகிப்புத்தன்மை ,தொழில்மீது கொண்ட பக்தி இவற்றுடன் நோய்கள் கண்டறியப்பட்டு தீா்வுகள் கிடைத்தன. 

இதையும் படியுங்கள்:
'உயில்' தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்!
National doctor's day

பலவிதமான நோய்களை நவீன மருத்துவ கருவிகளின் துணையோடு கண்டுபிடித்து, அரும்பாடுபட்டு இரவு பகல் என பாராமல், பொறுப்பான மருத்துவ பணியை மேற்கொண்டு, உரிய வைத்தியம் செய்து, உயிா்காக்கும் பணியை மருத்துவர்கள்  மேற்கொண்டு வருகிறாா்கள்!                

அவர்களின் மருத்துவ அா்ப்பணிப்பை கொண்டாடும் வகையில் வருடந்தோறும் ஜூலை முதல் நாள் தேசிய மருத்துவ தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. மேற்படி நாளானது 1991 முதல் கொண்டாடப்படுகிறது. மருத்துவ துறையில் பெரும்பங்கு வகித்த டாக்டர் பிதன் சந்திர ராய் என்வரின் நினைவாக அவரை கெளரவப்படுத்துவதற்காக கொண்டாடத் துவங்கப்பட்டது.

Bidhan Chandra Roy
Bidhan Chandra Roy

அதோடு அவர் 14 வருடங்கள் மேற்கு வங்க முதல்வராகவும் இருந்திருக்கிறாா். அவர் பிறந்த தேதி 1.7.1882. அவர் இறந்த தேதி 1.7.1962. இரண்டு தேதிகளும் ஒத்துப்போவது ஆச்சரியம்தானே! வருடாவருடம்  ஜூலை முதல் தேதி சர்வதேச மருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது. மருத்துவர் மற்றும் அவருடன் சோ்ந்து பணியாற்றும் அனைவரையும் நாம் ஒருபோதும் மறக்கவே முடியாது. காரணம் இது மட்டுமல்ல ! 

பல்வேறு தியாக செயல்களைக்காட்டிலும் உலகையே அச்சப்படவைத்த கரோனா எனும் உயிா்க்கொல்லி நோயிலிருந்து பல இடங்களிலும் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் அனைவர் பங்களிப்புடன் முகம் சுளிக்காமல் அா்ப்பணிப்பு உணர்வுடன் அல்லும் பகலும் அயராது பாடுபட்ட மருத்துவம் சாா்ந்த அனைவரையும் இந்த நாளில் மறக்கமுடியுமா?

இதையும் படியுங்கள்:
ஆக்ராவின் அழகை நோக்கி ஒரு பயணம்!
National doctor's day

அவர்களின் தியாக உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மருத்துவ துறையைச்சோ்ந்த அத்தனை பணியாளர்களையும் இந்த நாளில் நினைவு கூா்ந்து பாராட்டுவதோடு மைய, மாநில அரசுக்கும் மருத்துவ துறையினா்களுக்கும் ராயல் சல்யூட் அடிப்போம் அவர்களாடு சோ்ந்து மருத்துவ தினத்தை கொண்டாடுவோம்! மருத்துவத்தைப் போற்றுவோம்! நாமும் அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்குவோம்!    

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com