இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனைகள்: காதல் திருமணம்!

இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனைகள்: காதல் திருமணம்!

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளான கேத்ரின் ப்ரண்ட் மற்றும் நடாலி ஸ்கிவர் ஆகிய இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு நடந்த மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக கலந்துகொண்ட வீராங்கனைகள் கேத்ரின் ப்ரண்ட் மற்றும் நடாலி ஸ்கிவர். இவர்கள் இருவரும் நேற்று திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து நடாலி ஸ்கிவர் தெரிவித்ததாவது:

கடந்த  2019- ம் ஆண்டு அக்ரடோபரில் கேத்ரின் ப்ரன்ட்டுக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதன் பின்னர் 2020- ஆண்டு செப்டம்படரில்  திருமணம் செய்ய முடிவெடுத்தோம். ஆனால் உலகென்கும் கொரோனா தொற்று, ஊரடங்கு எல்லாம் ஏற்பட்டு, எங்கள் திருமணம் தள்ளிப் போனது. தற்போது விளையாட்டில் மட்டுமல்லாமல் மணவாழ்க்கையிலும் நாங்கள் இருவரும் இணைந்துள்ளோம்.

-இவ்வாறு நடாலி தெரிவித்தார். இவர்களின் திருமணத்துக்கு பிரபலங்கள் பலரும் வந்திருந்து வாழ்த்து தெரிவித்தனர். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த இரண்டு பெண்களின் திருமணத்துக்கு  வாழ்த்துகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com