இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

இலங்கை பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மக்களின் போராட்டம் பிரமாண்டமாக வெடித்ததுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையிலிருந்து தப்பியோடினார். அதையடுத்து அவர் இன்று அதிகாலையில் மாலத்தீவுக்கு தப்பி ஓடியதாக தகவல் வெளியானது

இந்நிலையில் அதிபர் கோத்தபய தப்பி சென்றதையடுத்து மீண்டும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இலங்கை பிரதமர் அலுவலகத்தை ஏராளமானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது போலீஸ் கண்ணீர் புகை வீசி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இந்நிலையில் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com