சர்வதேச மாஸ்டர் செஸ் போட்டி: 2-ம் இடம் பிடித்தார் பிரக்ஞானந்தா!

சர்வதேச மாஸ்டர் செஸ் போட்டி: 2-ம் இடம் பிடித்தார் பிரக்ஞானந்தா!

சர்வதேச அளவில் முக்கியமான 16 செஸ் வீரர்கள் பங்கேற்ற செசபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டியில் சென்னையைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.

இந்த சர்வதேச செஸ் போட்டி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில், நேற்று ( மே 26) நடந்த இறுதிபோட்டியில் உலகின் நம்பர் 2 செஸ்  வீரரான லிங் டிரன் என்பவரை பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். இப்போட்டியின் ஆரம்பம் முதலே லிங் டிரன் ஆதிக்கம் செலுத்திய நிலையில் இறுதியில் பிரக்ஞானந்தாவை வென்றார். இதையடுத்து இப்போடியில் பிரக்ஞானந்தாவுக்கு 2-ம் இடம் கிடைத்தது. எனினும் இப்போட்டித் தொடரில் பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்.

இதையடுத்து பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனம் வேலைவாய்ப்பு அளித்து அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.அதன்படி, பிரக்ஞானந்தா தனது 18-வது வயதில் தம் நிறுவனத்தில் பணியில் சேர்வார் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com