கலைஞர் M.கருணாநிதியின் நற்சிந்தனை துளிகள்

கலைஞர் M.கருணாநிதி அவர்களின் முக்கியமான நற்சிந்தனைத் துளிகளை இங்கே பார்க்கலாம்.
கலைஞர் M.கருணாநிதி
கலைஞர் M.கருணாநிதி
Published on

கலைஞர் M.கருணாநிதி தமிழர் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலும், இலக்கியத்திலும் தனிச்சிறப்புடையவராக அறியப்படுகிறார். அவருடைய நூல்கள், பேச்சுகள், கட்டுரைகள், திரைக்கதைகள் அனைத்தும் சமூகநலன், நீதிக்கேட்ட அரசியல், சமதர்மம், தமிழ் பெருமை ஆகியவற்றை எடுத்துரைக்கின்றன.

அவருடைய சில முக்கியமான நற்சிந்தனைத் துளிகள்:

1.கல்வி – மாற்றத்தின் முதற்கொடி

“கல்வி என்பது உரிமை. அதை மக்களுக்கு வழங்க அரசாங்கம் பொறுப்பு.”

பொருள்: கல்வி என்பது ஒரு சாதனையாக அல்ல, ஒவ்வொருவருக்கும் உள்ள அடிப்படை உரிமையாக கருணாநிதி கருதினார். இலவச கல்வி, சத்துணவு திட்டம் போன்றவை இவருடைய நவீன பார்வையின் விளைவுகள்.

2. தமிழ் – அடையாளத்தின் உயிரணு

“தமிழ் என்னும் தாயை இழந்தால், தமிழனை உலகம் இழக்கும்.”

பொருள்: மாணவர்கள் தங்கள் மொழியைக் காப்பாற்ற வேண்டும். தமிழின் பெருமையை உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும். இது வெறும் மொழிப்பற்று அல்ல, நம் அடையாளம்.

3. சமத்துவம் – ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு

“சமுதாயத்தில் ஒற்றுமை இல்லை என்றால், எதிரி வெற்றி பெறுகிறான்.”

பொருள்: சாதி, மத, வர்க்க பேதங்கள் இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ்வதே நம் இலக்கு. மாணவர்கள் அனைவரும் சமமாக, ஒரு சமூகமாக முன்னேற வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு டிஜிட்டல் சாதனை ஆவணம் வெளியிட முடிவு!
கலைஞர் M.கருணாநிதி

4. செயல்பாடும் சொற்களும்

“நாம் பேச வேண்டிய நேரத்தில் பேசவில்லை என்றால், பேசும் உரிமையே இல்லாதவர்கள் ஆகிறோம்.”

பொருள்: சமூக நியாயங்களுக் காக எழுந்து நிற்கும் தைரியம் வேண்டும். மாணவர்கள் சமூக அக்கறையுடன் செயல்படவேண்டும்.

5. உழைப்பே உயர்வு

“உழைக்கும் மக்கள் அரசு நடத்த வேண்டும்.”

பொருள்: உழைப்பின் மதிப்பு குறையக்கூடாது. சோம்பேறித்தனத்தை தவிர்த்து, கடின உழைப்பும் நேர்மையும் வேண்டும்.

அவர் எழுதிய சில நூல்கள்:

சங்க தொண்டர், நெஞ்சுக்குள் நீந்தும் நதி, வஞ்சி, தெனாலிராமன் நாடகம், திருக்குறளில் அரசியல் – திருக்குறளை அரசியல் பார்வையில் பகுப்பாய்வு செய்கிறது.

தலைமை பண்புகள் :

1. வாக்காற்றல் மற்றும் எழுத்தாற்றல்: இவர் ஒரு சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர். அவர் எழுதிய “முரசொலி” நாளிதழ், திமுகவின் முக்கிய ஊடகமாக இருந்தது. அவரது எழுத்துகள் மற்றும் உரைகள், கட்சியின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் முக்கிய கருவியாக இருந்தன.

2. சமூக நீதி மற்றும் சுயமரியாதை: சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படையில், கருணாநிதி சாதி ஒழிப்பு, பெண்கள் உரிமை, மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை செயல்படுத்தினார். “சுயமரியாதை திருமணங்கள்”க்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளித்தது, அவரது சமூக நீதி நோக்கத்தை பிரதிபலிக்கிறது.

3. நிர்வாக திறமை மற்றும் மக்கள் நல திட்டங்கள்: இவர் அறிமுகப் படுத்திய மக்கள் நலத்திட்டங்கள் ஏராளம். அவற்றுள் முக்கியமானவை - விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்யும் சந்தைகள், பார்வையிழந்தோருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை, மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்களின் புகார்களை நேரில் கேட்கும் நாள், குடிசைகளில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர வீடுகள்.

4. அரசியல் நுண்ணறிவு மற்றும் தேசிய அரசியலில் பங்கு: இவர், மாநில அரசியலைத் தாண்டி, தேசிய அரசியலிலும் முக்கிய பங்காற்றினார். அவர் தலைமையிலான திமுக, பல மத்திய அரசுகளின் கூட்டணிகளில் பங்கு பெற்றது, அவரது அரசியல் நுண்ணறிவை காட்டுகிறது.

5. கட்சி உறுப்பினர்களுடன் நெருக்கம்: இவர் கட்சி உறுப்பினர்களுடன் நெருக்கமான உறவை பேணினார். அவர் “உடன்பிறப்பே” என்ற வார்த்தையுடன் கட்சியினருக்கு எழுதிய 7,000க்கும் மேற்பட்ட கடிதங்கள், அவரது அன்பையும், வழிகாட்டுதலையும் பிரதிபலிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
அர்ச்சுனனின் பலம் ‘வில்’ பவர்! கலைஞர் கருணாநிதி சிலேடை!
கலைஞர் M.கருணாநிதி

6. தார்மீக நிலைப்பாடு மற்றும் அரசியல் உறுதி: அவர் தனது அரசியல் வாழ்க்கையில், தார்மீக நிலைப்பாட்டை கடைபிடித்தார். உதாரணமாக, 1975-ஆம் ஆண்டு அவசரநிலைக்கு எதிராக உறுதியுடன் நிலைத்தார். அவர் தனது அரசியல் நம்பிக்கைகளை உறுதியாக பின்பற்றினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com