பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள், நவம்பர் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வேளாண் துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் இம்மாதம் 15-ம் தேதிக்குள் நெற்பயிரை காப்பீடு செய்ய வேண்டும்.. மேலும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் விவசாயிகள் நவம்பர் 15-ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.
கன்னியாகுமரி, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ல விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கான காப்பீட்டை டிசம்பர் 15-ம் தேதிக்குள் செய்யலாம். பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பயிர்க்காப்பீடு செய்ய கடைசி தேதி வரை காத்திருக்க வேண்டாம். கூடுதல் விவரங்களுக்கு வேளாண்மை அலுவலர், வேளாண்மை உதவி அலுவலர் அல்லது வங்கிகளை அணுகலாம்.
–இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.