ரூ.3 லட்சம் மதிப்பில் பட்டாசுகள் பறிமுதல்: அனுமதியின்றி பதுக்கல்!

ரூ.3 லட்சம் மதிப்பில் பட்டாசுகள் பறிமுதல்: அனுமதியின்றி பதுக்கல்!
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில ஒரு வீட்டில் அனுமதியின்றிப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை சங்கராபுரம் போலீஸார் இன்று பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கடந்த 26-ம் தேதி ஒரு பட்டாசுக் கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசுக் கடைகளை சோதனை செய்ய உத்தரவிட்டார். அதையடுத்து போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

அதையடுத்து தேவபாண்டலம் கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வரும் கந்தசாமி (62) என்பவர் வீட்டில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து, அவரையும் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி, பட்டாசுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அந்தக் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ஜியாவுல்ஹக் எச்சரித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com