சாட்டிலைட் உதவியுடன் ரிலையன்ஸ் ஜியோ சேவை: லக்சம்பர்க் நிறுவனத்துடன் கூட்டு!

சாட்டிலைட் உதவியுடன் ரிலையன்ஸ் ஜியோ சேவை: லக்சம்பர்க் நிறுவனத்துடன் கூட்டு!
Published on

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சேட்டிலைட் உதவியுடன் கூடிய பிராட்பேண்டு சேவைகளை இந்தியாவில் வழங்க, லக்ஸம்பர்க்கை சேர்ந்த எஸ்.இ.எஸ்., நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாக அறிவித்துஉள்ளது.

இந்த முயற்சி குறித்து, இரு நிறுவனங்களும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது;

ரிலையன்ஸ் ஜிஒ மற்றும் எஸ்.இ.எஸ்  ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து, கூட்டாக, ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய நிறுவனத்தில், ஜியோ வசம் 51 சதவீத பங்குகளும்; எஸ்.இ.எஸ்., வசம் 49 சதவீத பங்குகளும் இருக்கும்ம்.

-இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து ஜியோ நிறுவனத்தின் இயக்குனர் ஆகாஷ் அம்பானி கூறியதாவது:

'பைபர்' அடிப்படையிலான சேவைகள் மற்றும் '5ஜி' ஆகியவற்றை தொடர்ந்து, அடுத்து, இந்த புதிய சேவையையும் வழங்க இருக்கிறோம். எஸ்.இ.எஸ்., உடனான கூட்டு முயற்சியின் வாயிலாக, பிராட்பேண்டு சேவை மேலும் வளர்ச்சியுறு என்று நம்புகிறோம்.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com