ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் கொடுத்த தமிழ்த்தாத்தா!

பிப்ரவரி 19: தமிழ் தாத்தா உ.வே.சா பிறந்தநாள்!
 U. Ve. Swaminatha Iyer
U. Ve. Swaminatha Iyer
Published on

தமிழுக்கு அமுதென்று போ். தமிழ் வளா்ச்சிக்காக பலர் அரும்பாடு பட்டிருக்கிறாா்கள்.

அழிந்து கொண்டிருந்த சங்ககால நூல்கள், ஓலைச்சுவடிகளாய் இருந்தவைகளையெல்லாம் இரவு பகல் பாராமல், தேடித்தேடி கண்டறிந்து அதில் சிதைந்து மறைந்து விட்ட அடிகளையும் , சொற்களையும் ஆராய்ந்து, அதன் அடிப்படையில் முழுப்பொருளும் விளங்கும் வகையில் புதுப்பித்து தந்த தமிழ் அறிஞா், உத்தமதானபுரம் வேங்கடசுப்பைய்யரின் குமாரரான சாமிநாதன் அய்யா் (உ வே சா), 19.02.1855ல் பிறந்து 28.04.1942ல் மறைந்தாா்.

அவரது பிறந்த நாளில் அவர்தம் வல்லமை, மற்றும் ஆற்றல் இவைகளைப்பற்றி இந்த கட்டுரை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

உ.வே.சா பாபநாசம் உத்தமதானபுரத்தில் பிறந்தாா்,

இயற்பெயர் வெங்கட்டராமன்.

தாயாா்சரஸ்வதி அம்மையாா் இவரை செல்லமாக சாமிநாதன் என அழைக்கவே, அதுவே நிலைத்தது.

ஆரம்பக்கல்வி திண்ணைப்பள்ளி. அதன்பிறகு சடகோப அய்யங்காா், மற்றும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆகியோரிடம் தொடர்கல்வி பயின்றாா். ஏழ்மையான குடும்ப சூழலால் ஊா் ஊராய் அலைய வேண்டிய நிலையில் படித்து தமிழில் நல்ல புலமை பெற்றாா்.

1880ம் ஆண்டு முதல் கும்பகோணம் கல்லூாியில் 23ஆண்டுகள் வேலை. அதன்பிறகு 1903ல் சென்னை மாநிலக் கல்லூாியில் ஆசிாியர் பணி. 1942ம் ஆண்டில் மீனாட்சி தமிழ்க் கல்லூாியில் முதல்வர் பதவி வகித்தாா்.

நிறைய புத்தகங்கள் எழுதிய பதிப்பாளர்.

மூவாயிரத்திற்கு மேலான ஏட்டுச்சுவடி மற்றும், கையெழுத்து ஏடுகளையும் சேகரித்து வைத்திருந்தாா்.

தமிழ் மீது தீராத பற்றுதல் கொண்டு, சங்க இலக்கியம் 12, புராணங்கள் 9, தூது நூல்கள் 3, வெண்பா4, அந்தாதி 2, பரணி2, அங்கையற்கண்ணி மாலை, இரட்டைமணி மாலை இது போன்ற 90 வகையான ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் கொடுத்த பெருமைக்குாியவர்.

1887ல் சீவகசிந்தாமணி முதலாவது காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, பத்துப்பாட்டு, மற்றும் குறுந்தொகை போன்ற நூல்களையும் வெளியிட்டவர்.

இதையும் படியுங்கள்:
அந்த 'கடைசி' நொடியில் மிஞ்சுவது எது? ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்லும் சூத்திரங்கள்!
 U. Ve. Swaminatha Iyer

வாழ்நாளில் பல்வேறு விருதுகள் வாங்கியுள்ளாா்.

தமிழ்மொழிக்கு செய்த தொண்டினால் அனைவராலும் தமிழ்த்தாத்தா என அழைக்கப்பட்டவர்.

உத்தமதானபுரத்தில் வாழ்ந்த இல்லம் தமிழக அரசால் உ.வே.சா நினைவு இல்லமாக மாற்றப்பட்டது.

அவரது பெயரால் தமிழ் அறிஞர்களுக்கு தமிழ் வளா்ச்சித்துறை சாா்பாக , விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழுக்கு அருந்தொண்டு புாிந்த அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com