சாலையில் போடப்பட்டுள்ள கோடுகளுக்கு என்ன அர்த்தம்..? இது நாள் வரைக்கும் இது தெரியாம போச்சே..!

Road marking lines
Road marking lines
செ.ஹரிஷ்

வணக்கம், என் பெயர் செ.ஹரிஷ். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அ.இராமலிங்கபுரம் என்ற கிராமமே எனது ஊர். சிறுவயதிலிருந்தே எனக்கு எழுத்தார்வம் நன்றாக வந்தன. அதனால் பல கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு சில வெற்றிகளையும் பெற்றுள்ளேன். இப்போது எனக்கு வயது 19, கட்டுரையோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் சிறுகதைகள், கவிதைகள், ஜோக்ஸ் என்று எழுத தொடங்கியுள்ளேன். ஒரு சில சிறுகதை போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளேன். மேலும் எனது படைப்புகள் கல்கி இணையதளத்தின் மூலம் மக்களிடம் சென்றடைவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றியை கல்கி குழுமத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனது எழுத்துப் பணி எளிய மக்களுக்கும் புரியும் வகையில் தொடரும் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்!

Updated on

பொதுவாக நாம் சாலையில் பயணிக்கும் போது சாலையில் போடப்பட்டுள்ள வெள்ளை நிற கோடுகளையும், மஞ்சள் நிற கோடுகளையும் பார்த்திருப்போம். சாலையின் ஒரு சில பகுதியில் கோடுகள் நீளமாகவும், கோடுகள் விட்டுவிட்டு போடப்பட்டு இருப்பதையும் பார்த்திருப்போம். இது போன்ற கோடுகள் சாலையில் ஏன் போடப்படுகிறது..? எதற்கு போடப்படுகிறது..? என்பது நம்மில் சில பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..! வாகன விபத்துகளை தடுப்பதற்காகவும், வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவதற்காகவும் இது போன்ற கோடுகள் சாலையில் போடப்படுகின்றன.

வெள்ளை நிறக் கோடுகள் நீளமாக காணப்பட்டால்:

சாலையின் நடுவே வெள்ளை நிற கோடுகள் நீளமாக போடப்பட்டிருந்தால், நாம் அந்தப் பகுதியில் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும், அதேபோல் வேகமாக செல்லக்கூடாது. குறிப்பாக முன்னே செல்லும் வாகனங்களை முந்தி செல்வதை தவிர்க்க வேண்டும் என்பதை குறிக்கிறது. பொதுவாக இது போன்ற நீளமான கோடுகள் சாலையின் வளைவில் போடப்பட்டிருக்கும்.

வெள்ளை நிறக் கோடுகள் விட்டு விட்டு காணப்பட்டால்:

சாலையில் நடுவே வெள்ளை நிறக் கோடுகள் விட்டுவிட்டு காணப்பட்டால், நாம் அந்த பகுதியில் முன்னே செல்லும் வாகனங்களை தேவைப்பட்டால் பாதுகாப்பாக முந்தி செல்லலாம் (overtake) என்பதை குறிக்கிறது.

மஞ்சள் நிறக்கோடுகள் நீளமாக காணப்பட்டால்:

சாலையின் நடுவே மஞ்சள் நிற கோடுகள் நீளமாக காணப்பட்டால், அந்தப் பகுதியில் மிக கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் ஏனென்றால் அந்த பகுதியானது வெளிச்சம் குறைவானதாக காணப்படும் என்பதை குறிக்கிறது. அதேபோல் மிக அவசரம் என்றால் மட்டுமே முன்னே செல்லும் வாகனங்களை பாதுகாப்பான முறையில் முந்திச் செல்ல வேண்டும். பொதுவாக மலை பிரதேச சாலைகளில் இதுபோன்ற மஞ்சள் நிற கோடுகளை நாம் பார்க்க முடிகிறது.

இரண்டு மஞ்சள் நிற கோடுகள் நீளமாக காணப்பட்டால்:

சாலையின் நடுவே இரண்டு மஞ்சள் நிற கோடுகள் நீளமாக காணப்பட்டால், அந்தப் பகுதியில் நாம் மிக மிக கவனமாக செல்ல வேண்டும். அதேபோல் முன்னே செல்லும் வாகனங்களை எக்காரணம் கொண்டும் முந்தி செல்லக்கூடாது. இது போன்ற கோடுகள் ஆபத்தான வளைவுகள் போன்ற பகுதியில் போடப்பட்டிருக்கும்.

வாகன ஓட்டிகள், சாலையில் போடப்பட்டிருக்கும் கோடுகளை பார்த்து அந்த பகுதியில், வாகனங்களை முறையாகவும், பாதுகாப்பாகவும் இயக்கினால் பெரும்பாலான சாலை விபத்துகளும், உயிர் சேதங்களும் தவிர்க்கப்படும்.

இதையும் படியுங்கள்:
சென்னையில் புறநானூறு வீதி! அப்படீன்னா என்னங்க?
Road marking lines
logo
Kalki Online
kalkionline.com