என்னது, பையக் கூட விட்டுவைக்கலயா? யார்ரா அவன்..? வார்னரின் உருக்கமான வீடியோ!

என்னது, பையக் கூட விட்டுவைக்கலயா? யார்ரா அவன்..? வார்னரின் உருக்கமான வீடியோ!
Editor 1

ஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் அவரது பையை காணவில்லை என்றும் அது மிகவும் தனக்கு சென்டிமென்டான பை என்றும் கூறி ஒரு உருக்கமான வீடியோவை பதிவிட்டிருக்கிறார்.

ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் என்னத்தான் ஆஸ்திரேலியாவில் பிறந்தாலும் இந்திய மக்களின் பேரன்பைப் பெற்றவர். அதற்கு முக்கிய காரணம் அவர் இந்திய மக்களிடையே வைத்திருக்கும் அளவுக்கடந்த பிரியம்தான். அவர் என்றும் இந்தியாவை, குறிப்பாக சென்னையே அவருக்குப் பிடித்தமான இடம் என்று கூறுவார். வார்னர் இந்திய பாடல்களையும் திரைப்பட காட்சிகளையும் ரீமேக் செய்தே இந்தியாவில் செல்ல பிள்ளையானார். அவருடைய வலைத்தளங்களில் அதிகம் காணப்படும் வீடியோக்கள் என்றால் அது இந்திய சினிமாவின் ரீமேக் வீடியோக்கள்தான்.

அந்தவகையில் இந்தியாவின் செல்லப்பிள்ளையான ஆஸ்திரேலியா வீரர் வார்னர் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இப்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் டெஸ்ட் தொடரே அவரின் கடைசி விளையாட்டாகும். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களிலும் தனது ஓய்வறிப்பை வெளியிட்டார்.

இதையும் படியுங்கள்:
2024 டி-20 போட்டிகள்: ரோஹித், விராட் கோலிக்கு கடைசி ஆண்டா?
என்னது, பையக் கூட விட்டுவைக்கலயா? யார்ரா அவன்..? வார்னரின் உருக்கமான வீடியோ!

இந்நிலையில் டேவிட் வார்னர் இந்த டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் ஜனவரி 3ம் தேதி தனது இறுதி ஆட்டத்தை விளையாடவுள்ளார்.இந்த சமயத்தில் தான் அவர் உணர்வுபூர்வமிக்க ஒரு பையை காணவில்லை. டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டிக்காக ஆஸ்திரேலியா அணி மெல்போர்னில் இருந்து சிட்னிக்கு சென்றது. அப்போதுதான் டேவிட் வார்னரின் பை தொலைந்துவிட்டது. அந்த பையில் வார்னர் டெஸ்ட் போட்டிகளில்

அணியும் தொப்பிகள் உள்ளது. மேலும் ஆஸ்திரேலிய வீரர்களின் மிகப்பெரிய கவுரவமான பச்சைத் தொப்பியும் அந்த பையில் இருந்தது. டெஸ்ட் போட்டிகளில் அற்புதமாக விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே அஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அந்த பச்சைத் தொப்பியை வழங்கும். திருட்டுப்போன அந்த பையில் இரண்டு பச்சை நிறத்தொப்பி இருந்தது. அதில் ஒன்று வார்னரின் டெஸ்ட் தொடர் அறிமுகத்தின்போது அளிக்கப்பட்டது. அந்த தொப்பியைத்தான் தனது கடைசி போட்டியில் அணிய வேண்டுமென்று எடுத்து வந்தார் வார்னர்.

இதன்காரணமாக தனது பையை திரும்பத் தரச்சொல்லி முகம் தெரியாத திருடனுக்கு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்,” என் பையை யாரோ எடுத்துக்கொண்டார்கள். அது எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான ஒன்று. அந்த பையில் இருக்கும் எனது தொப்பியைத்தான் நான் விளையாடும்

கடைசிப் போட்டியில் அணிய வேண்டும் என விரும்பினேன். அதில் எனது குழந்தைகளுக்காக வாங்கி வைத்திருந்த பரிசிப் பொருட்களும் உள்ளன. உங்களுக்கு அந்த பைத்தான் வேண்டுமென்றால், அதேபோல் என்னிடம் இன்னொரு பை உள்ளது. அதை என்னிடம் இருந்து வாங்கிக்கொண்டு அந்த பையை மட்டும் திருப்பிக் கொடுங்கள்” என்று திருடனுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார், டேவிட் வார்னர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com