

கொளுத்தும் வெயிலுக்கு இந்தியா தன்னைத் தானே தயார்படுத்திக் கொள்ளும்போது, பாதுகாப்போடு இருப்பதன் மூலமும், தன்னைத்தானே ஹைட்ரேட்டேட் ஆக (நீரேற்றத்துடன்) வைத்துக் கொள்வதன் மூலமும் ஒவ்வொருவரும் அவரவர் ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்வது மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது. இது பெரியவர்களான நமக்கு மட்டுமே அல்ல! கடுமையான வெப்ப அலைகளிலிருந்து நமது குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி என்பதை அறிந்து கொள்வது தான் இந்தக் கோடையில் நமது மிக மிக முக்கியமான டாஸ்க்.
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) கூற்றுப்படி, இந்த ஆண்டு, இந்தோ-கங்கைச் சமவெளிகள் மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதிகப்படியான அந்த மோசமான வெப்ப அலைகளில் இருந்து நமது குழந்தைகளை எப்படிப் பராமரிப்பது என்பது குறித்த ஆலோசனைகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. அதைப் பற்றி நாம் இப்போது அறிந்து கொள்வோம்.
"உங்கள் குழந்தைகளை வெப்ப அலையிலிருந்து தப்புவதற்கு தயார்படுத்துங்கள். வெப்ப அலைகளைத் தவிர்க்க செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை... எனத் தங்களது இடுகைக்கு அவர்கள் தலைப்பிட்டுள்ளனர்.
* நிறுத்தப்பட்டுள்ள கார்களில் குழந்தைகளை கண்காணிக்காமல் விடாதீர்கள். ஆபத்தான வெப்பநிலைக்கு வாகனங்கள் வேகமாக வெப்பமடையும்.
* அவர்களுக்கு நிறைய திரவங்களை குடிக்க கொடுங்கள்.
* குழந்தைகளில் வெப்பம் தொடர்பான நோய்களை எவ்வாறு கண்டறிவது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
* குழந்தைக்கு செறிவூட்டப்பட்ட (அடர்நிறம்) சிறுநீர் இருக்கிறதா என்று சோதிக்கவும், இது நீரழிவைக் குறிக்கும்.
- என்பன போன்ற முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களை அவர்கள் நினைவூட்டி பட்டியலிட்டுள்ளனர்.
வெப்ப அலை என்றால் என்ன?
வெப்ப அலை என்பது இந்தியாவின் வடமேற்கு மற்றும் தென் மத்திய பகுதிகளில் கோடை காலத்தில் ஏற்படும் சாதாரண அதிகபட்ச வெப்பநிலையை விட அசாதாரணமாக அதிக வெப்பநிலையின் காலகட்டமாகும். அதிக வெப்பத்தின் வெளிப்பாடு, ஒரு குறுகிய காலத்திற்கு கூட, உடலில் குறிப்பிடத்தக்க பாதகமான
விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், அந்த வெப்ப அலைகளை எதிர்கொள்ள பாதுகாப்பான சில வழிமுறைகளைக் கையாள்வதின் மூலம் அவற்றிலிருந்து நம்மை நாம் எளிதாகப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதால் அதைப் பற்றிய அச்சத்தை தவிர்த்து விடலாம் என்கிறார்கள் குழந்தைகள் நல மருத்துவர்கள்.
குழந்தைகள் சிகிச்சை மற்றும் குழந்தை மருத்துவ நிபுணர்கள் இவ்விஷயம் குறித்துப் பேசும் போது என்ன சொல்கிறார்கள் என்றால்,"வெப்ப அலைகள் குறுகிய காலத்தில் அதிக அளவிலான மக்களை கடுமையாக பாதிக்கலாம், அடிக்கடி பொது சுகாதார அவசரநிலைகளை தூண்டலாம் மற்றும் அதிகப்படியான இறப்புகளையும் கூட ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகளும் இதில் உண்டு என்கிறார்கள்.
வெப்பம் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?
மனிதர்கள் மீது வெப்ப அலையின் நேரடி விளைவு:
உஷ்ண நோய், சுவாச நோயால் விரைவான மரணம், இருதய நோய், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் போன்றவையாக இருக்கின்றன
மனிதர்கள் மீது வெப்ப அலையின் மறைமுக விளைவு:
மறைமுகமாக, இது சுகாதார சேவைகளை பாதிக்கலாம்; நீரில் மூழ்கி உயிரிழப்பது போன்ற விபத்துகளின் அதிக ஆபத்து கோடை காலத்தில் கவனிக்கப்படுகிறது; மற்ற மறைமுக விளைவுகளில் உணவு மற்றும் நீரினால் பரவும் நோய்களின் அதிகரிப்பு அடங்கும், மேலும் இது மின்சாரம், நீர், போக்குவரத்து மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றின் சாத்தியமான இடையூறுகளை ஏற்படுத்தும்.
வெப்ப நோயின் பல்வேறு கட்டங்கள்...
வெப்ப நோயின் பல்வேறு நிலைகளில் வெப்ப பிடிப்புகள், வெப்ப சோர்வு மற்றும் வெப்ப பக்கவாதம் ஆகியவை அடங்கும்; அவை மூன்றும் ஆபத்தானவை மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். "சில முக்கியமான அறிகுறிகளில் சோர்வு, அதிகப்படியான வியர்த்தல், தலைச்சுற்றல் அல்லது மயக்கம், குளிர்ச்சியான தோல் மற்றும் புறப்பகுதிகள் ஆகியவை அடங்கும். சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது வெப்ப பக்கவாதம் எனும் கடுமையான வெப்ப நோயாக மாறலாம் என்கிறார்கள் குழந்தைகள் நல மருத்துவர்கள்.
பொதுவாக கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் முக்கிய உடல்நலக் கோளாறுகள் என்னென்ன தெரியுமா?
*வெப்ப நோய்
* வயிற்றுப்போக்கு நோய்
* வைரஸ் ஹெபடைடிஸ்
* தோல் வெடிப்புகள்
* நீச்சல் காதுகள் (Swimmers ears)
* வெண்படல அழற்சி
*சிக்கன் பாக்ஸ்
- போன்ற நோய்கள் குழந்தைகளைத் தாக்கலாம். எனவே போதிய முன்னேற்பாடுகளைச் செய்து கொள்வது நல்லது என்கிறார்கல் குழந்தைகள் நல சிகிச்சை நிபுணர்கள்.