

டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் இன்று அரங்கேறும் 48-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது.
டெல்லி அணி 9 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
சென்னை அணி 9 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 5 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
அதாவது புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ள அணிகள் 12 புள்ளிகளுக்கு மேல் பெற்று பிளே ஆப் ரேசில் இருக்க, மீதமுள்ள ஒரு இடத்திற்காக சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே பலப்பரீட்சை நடைபெறுகிறது.
இருஅணிகளும் 5-வது வெற்றியை வசப்படுத்த கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதி கொண்டதில் 20 சென்னையும், 12-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது.
அதனை தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய சென்னை அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இறுதியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிக்கொடி நாட்டியது.
இதன் மூலம் சிஎஸ்கே அணி தனது 5 வெற்றியை பதிவு செய்ததுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேறியது.