உங்களுக்கு நரைமுடி பிரச்சனை இருக்கா? அப்ப துளசியை இப்படி யூஸ் பண்ணுங்க!

உங்களுக்கு நரைமுடி பிரச்சனை இருக்கா? அப்ப துளசியை இப்படி யூஸ் பண்ணுங்க!
Published on

துளசியின் ஆரோக்கியம் மற்றும் அழகு நன்மைகளை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இருப்பினும் உங்கள் நரைமுடி பிரச்சனையை சரி செய்ய துளசி உதவுமா? ஆம் நரைமுடி ஹேர் பேக்கில் பயன்படுத்த துளசி ஒரு சிறந்த மூலப் பொருளாக உள்ளது. துளசியில் ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் உள்ளன. இது மெலனின்  உற்பத்தியை தூண்டுகிறது. இது உங்கள் முடிக்கு நிறத்தை கொடுக்க உதவும். இந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் முன்கூட்டியே நரைப்பதை தடுக்கவும் நரைப்பதால் ஏற்படும் சில விளைவுகளை மாற்றவும் உதவும். அந்த வகையில் துளசி உங்கள் நரைமுடியை போக்க எப்படி உதவுகிறது என பார்ப்போமா…

நரைமுடிக்கு துளசி ஹேர் பேக்!

துளசி அதன் இயற்கையான நிறத்தை மீட்டெடுப்பது உட்பட பல நன்மைகளைக் கொண்டுள்ளது. துளசியில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்துள்ளன. இது முடியை முன்கூட்டியே நரைக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை போராட உதவுகிறது. இந்த மூலிகையில் வைட்டமின் சி உள்ளது. இது முடி உதிர்வதை தடுக்கிறது மற்றும் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. கூடுதலாக துளசியில் உள்ள இயற்கை எண்ணைகள் உச்சந்தலையில் ஈரப்பதம் அளித்து ஊட்டம் அளிக்க உதவுகிறது. மேலும் துளசி ஆரோக்கியமான முடியை மேம்படுத்து உதவுகிறது.

துளசி ஹேர் பேக் செய்வது எப்படி?

ரை முடியை போக்க உதவும் துளசி ஹேர் பேக் செய்ய துளசி இலைகளை அரைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு டேபிள் ஸ்பூன் அரைத்த துளசி இலை பேஸ்ட் ஒரு தேக்கரண்டி வெந்தய பொடி சேர்த்து ஒன்றாக கலக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை உங்கள் தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். வழக்கம்போல் ஷாம்பு மற்றும் கண்டிஷனிங் செய்வதற்கு முன் அதை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

நரை முடிக்கு துளசி ஹேர் பேக்கிங் நன்மைகள்!

துளசியின் இயற்கையாகவே பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை உச்சந்தலையில் தொற்று ஏற்படாமல் இருக்க உதவுகிறது. துளசி ஹேர் பேக் நரைமுடியின் தோற்றத்தை குறைக்கவும் இயற்கையான நிறத்தை மீட்டெடுக்கவும் உதவும் இந்த ஹேர் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி உதிர்தல் குறையும் என்று கூறப்படுகிறது.

துளசி இலைகளை பறிப்பது எப்படி?

சிறந்த துளசி இலைகளைப் பறிக்க கரும்பச்சை நிறத்திலும் பளபளப்பில் உள்ள இலைகளை பார்த்து பறிக்க வேண்டும். இலைகள் உறுதியானதாகவும் புதியதாகவும் இருக்க வேண்டும். வாடிப்போன அல்லது நிறம் மாற்றத்தின் அறிகுறிகள் இருக்கும் இலைகள் வேண்டாம். இலைகளில் ஏதேனும் புள்ளிகள் அல்லது நிறமாற்றம் உள்ளதா என சரிபார்த்து பூச்சி தாக்குதல் இல்லாத இலைகளை பறிக்க வேண்டும். இலைகளை மெதுவாக பறித்து சேதம் அடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பறித்த உடன் இலைகளை உடனடியாக பயன்படுத்தவும். அல்லது குளிர்ந்த உலர்ந்த இடத்தில் சேமிக்க வேண்டும்.

வழக்கமான முடி பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றி வாரத்திற்கு ஒருமுறை துளசி ஹேர் பேக்கை பயன் படுத்தவும் இது உங்கள் தலைமுடியை ஆரோக்கிய மாகவும் பளபளப்பாகவும் கருமையாகவும் வைத்திருக்க உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com