விராட் கோலியை நான் கேப்டனாக அறிவித்திருப்பேன் – மனம்திறந்த ரவி சாஸ்திரி!

virat kohli and Ravi shastri
virat kohli and Ravi shastri
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு மற்றும் கேப்டன்சி விவகாரம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

ரோஹித் சர்மாவின் டெஸ்ட் ஓய்வுக்குப் பிறகு விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்த நிலையில், கோலியின் ஓய்வு இன்னும் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்க வேண்டும் என்றும், தான் பயிற்சியாளராக இருந்திருந்தால் கோலியை மீண்டும் டெஸ்ட் கேப்டனாக அறிவித்திருப்பேன் என்றும் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது தனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்ததாகவும், மேலும் அவர் ஓய்வு பெற்ற விதம் தன்னை மிகவும் துயரப்படுத்தியதாகவும் ரவி சாஸ்திரி குறிப்பிட்டார். கோலி, டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு தூதுவராக செயல்பட்டவர் என்றும், வெளிநாடுகளில் அவர் இந்திய அணியை வழிநடத்திய விதம் அசாதாரணமானது என்றும் சாஸ்திரி பாராட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடர் முடிந்த பிறகு, கோலியை டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமித்திருப்பேன் என்று சாஸ்திரி கூறியுள்ளார். விராட் கோலியின் கேப்டன்சி காலத்தில் இந்திய அணி பல வெற்றிகளைப் பெற்று ஐசிசி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கடந்த ஐந்து ஆண்டுகளில் கோலியின் டெஸ்ட் பார்ம் கணிசமாக வீழ்ச்சியடைந்தது.

விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பு குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சரியான தகவல்தொடர்பை மேற்கொள்ளவில்லை என்றும், ஓய்வு முடிவிலிருந்து அவரை பின்வாங்க யாரும் அறிவுறுத்தவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது கேப்டனாக இருக்க BCCI அதிகாரிகள் கோலியிடம் கூறியதாகவும், பின்னர் தொடரின் முடிவில் கோலிக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விராட் கோலி ஓய்வு முடிவை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
பழைய பிரிட்ஜை தூக்கிப் போடுங்க! ₹20,000-க்குள் அட்டகாசமான 5 மாடல்கள்!
virat kohli and Ravi shastri

தற்போது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாத நிலையில், இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த சூழலில், ரவி சாஸ்திரியின் இந்த கருத்துக்கள் கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. சுப்மன் கில்லுக்கு டெஸ்ட் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி எதிர்காலத்தில் எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com