செஸ் ஒலிம்பியாட்; இந்திய ஆடவர் பி அணி முன்னிலை!

செஸ் ஒலிம்பியாட்; இந்திய ஆடவர் பி அணி முன்னிலை!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஆடவர் 'பி' அணி, தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றிபெற்று, புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் நீடிக்கிறது

இதுகுறித்து இந்திய சதுரங்கக் கூட்டமைப்பு தெரிவித்ததாவது:

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா சார்பில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் தலா 3 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த போட்டிகளின் 4-வது சுற்றில் ஆடவர் பிரிவில் இந்தியா '' அணி பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது. ஆனால் இந்த ஆட்டம் இரு நாட்டுக்கும் வெற்றி தோல்வியின்றி 2-2 என கணக்கில் டிராவாக அமைந்தது.

இந்நிலையில் நேற்று இந்திய 'பி' அணி, இத்தாலியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில், குகேஷ் மற்றும் நிஹில் வெற்றியை வசப்படுத்தினர். ஆனால், பிரக்ஞானந்தா 42-வது நகர்தலிலும், சத்வானி 30-வது நகர்த்தலிலும் டிராவை சந்தித்தனர். முடிவில், 3-1 என்ற புள்ளிக்கணக்கில் இத்தாலி அணியை வீழ்த்தி, இந்தியா தொடர்ந்து தனது 4-வது வெற்றியை பதிவு செய்தது. 

மேலும் இப்போட்டியில் ஆடவர் 'சி' அணி, ஸ்பெயின் நாட்டுடன் விளையாடியதில் ஸ்பெயின் அணி 2.5 – 1.5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்றது. இதன் மூலம் இந்த தொடரில்  இந்திய ஆடவர் 'சி' அணி முதல் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com