மலர் மருத்துவம் பலன் தருமா ?

மலர் மருத்துவம் பலன் தருமா ?

மருத்துவ குணம் கொண்ட மலர்கள் :

மருத்துவத்தில் பூக்களும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மலர்கள் மற்றும் பயன்கள் :

  • மருதாணிப் பூவை தூங்கச் செல்லுமுன் தலையில் வைத்துக்கொண்டால் அல்லது படுக்கையில் வைத்துக் கொண்டால் ஆழ்ந்த தூக்கம் வரும். மனரீதியாக பிரச்சனை உள்ளவர்கள் இந்தப் பூவை வைத்துக்கொண்டால் பிரச்சனை அகன்றுவிடும்.

  • தாமரை மலரை சுத்தம் செய்து குடிநீரில் சேர்த்து காய்ச்சி அருந்தி வந்தால் ரத்த மூலம், சீதபேதி குணமடையும். மூளை வளர்ச்சிக்கு தாமரை மலர் முக்கிய மருந்தாகும். தாமரை விதையை சாப்பிட்டால் ரத்த விருத்தி உண்டாகும். உடல் சூடு குறையும்.

  • ரோஜா மலரின் இதழ்கள் வாய்ப்புண், குடல் புண், தொண்டை புண்ணை ஆற்றும். சீறுநீர் கடுப்பை நீக்கும். காது வலி, காதுப்புண்ணை ரோஜா தைலம் குணமாக்கும். மூலச்சூடு, மலச்சிக்கல், ரத்த சுத்திகரிப்பு போன்றவைக்கும் ரோஜா நல்ல மருந்து.

  • அரளிப்பூ தலையில் உள்ள பேன்களை கொல்லும். அல்லி மலரின் இதழ்களையும் அதன் உள்பகுதியையும் அப்படியே பச்சையாக சாப்பிடலாம். இதனால் உஷ்ணம் குறையும்.

  • மல்லிகைப் பூக்கள் களைப்பை நீக்கி புத்துணர்ச்சி தரும். கண் வியாதிகளை நீக்கும். மல்லிகை மணம் தாம்பத்திய உறவை நீடிக்கச் செய்யும்.

  • நீரிழிவு உள்ளவர்கள் அல்லிப் பூவை கொண்டு கொதிக்க வைத்த நீரைக் குடித்தால் நோய் கட்டுப்படும்.

  • எருக்கம் பூ குஷ்டநோயை குணப்படுத்தும் என்று சித்த வைத்தியமுறை கூறுகிறது.

  • இலுப்பை மலர்கள் ஆண்மைக் குறைவுக்கு அரிய மருந்து.

  • சளி, மூக்கடைப்புக்கு தூதுவளை மலர் நல்லது.

  • முருங்கைப்பூ தாது வளர்ச்சிக்கு உகந்தது.

  • வேப்பம்பூ குடலை சுத்தம் செய்து பூச்சிகளை கொல்லும்.

  • மகிழம்பூ காது வலியை சரி செய்யும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com