தேசிய மகளிர் குத்துச்சண்டை போட்டி : தமிழக வீராங்கனைக்கு வெள்ளி!

வீராங்கனை கலைவாணி
வீராங்கனை கலைவாணி
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

போபாலில் நடைபெற்ற 6வது தேசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை கலைவாணி வெள்ளிப்பதக்கம் வென்றார். 

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 6வது தேசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. 12வகையான எடை பிரிவில் இந்தியா முழுவதும் இருந்து 302 வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர்.

இதில், 48கிலோ எடை பிரிவில் தமிழக வீராங்கனை கலைவாணி, 2019 உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி வென்றவரும், இந்தியன் ரயில்வே அணியை சேர்ந்தவருமான மஞ்சு ராணியை எதிர்கொண்டார். 3 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 0-5 என்ற கணக்கில் தமிழக வீராங்கனை கலைவாணி வெள்ளிப்பதக்கம் வென்றார். 

ஏற்கனவே, 2 சர்வதேச போட்டிகளில் ஒரு தங்கம், ஒரு வெண்கலம் வென்றுள்ள தமிழக வீராங்கனை கலைவாணி, வளர்ந்து வரும் குத்துச்சண்டை வீராங்கனைகளில் முக்கிய இடம் பெற்றுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com