சதம் அடித்து பண்ட் வரலாற்று சாதனை!

rishab pant
rishab pant
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார்.

முன்னதாக முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் குவித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற எம்.எஸ். தோனியின் சாதனையை (6 சதங்கள்) முறியடித்து 7வது சதத்தைப் பதிவு செய்திருந்தார். தற்போது இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் அடித்து தனது 8வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த இந்தியாவின் 7வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன்பு விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர் (மூன்று முறை), ராகுல் டிராவிட் (இரு முறை), விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரோஹித் சர்மா ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

மேலும், ரிஷப் பண்ட், ஜிம்பாப்வேயின் ஆண்டி ஃப்ளவருக்குப் பிறகு, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் என்ற அரிய சாதனையைப் படைத்துள்ளார். 2001 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆண்டி ஃப்ளவர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

இதையும் படியுங்கள்:
அவசர அவசரமா சாப்பிடுறவங்க இத கொஞ்சம் கவனியுங்க...
rishab pant

அண்மையில் விபத்தில் சிக்கி மீண்டு வந்த ரிஷப் பண்ட்டின் இந்த அபாரமான ஆட்டம், அவரது மீள் திறனையும், அணியின் வெற்றிக்கு அவர் எவ்வளவு முக்கியம் என்பதையும் நிரூபிக்கிறது. அவரது இந்த வரலாற்று சாதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். இங்கிலாந்து மண்ணில் பண்ட்டின் இந்த அதிரடி ஆட்டம், இந்திய அணிக்கு இந்தப் போட்டியில் வலுவான நிலையை ஏற்படுத்தித் தந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com