

இமாசலபிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் இன்று நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
பஞ்சாப் அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, ஒரு முடிவில்லை, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 13 புள்ளிகளை பெற்றுள்ளது.
டெல்லி அணி 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வி கண்டு பிளே-ஆப் சுற்றை ஏறக்குறைய இழந்து விட்டது. இந்த ஆட்டத்தில் தோற்றால் முழுமையாக முடிந்து விடும்.
இவ்விரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 18-ல் பஞ்சாப் அணியும், 17-ல் டெல்லி அணியும் வென்று இருக்கின்றன.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவர் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்களை குவித்தது.
அதனை தொடர்ந்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய டெல்லி அணி அதிரடியாக விளையாடி இறுதியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் டெல்லி அணி தனது 5-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.