

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று 2 லீக் ஆட்டத்தின் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்டை நடத்துகின்றன.
இவ்விரு அணிகளும் இதுவரை 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியதில் 17-ல் ஐதராபாத்தும், 7-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில், இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்களை குவித்தது.
அதனை தொடர்ந்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய பஞ்சாப் அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இறுதியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.
நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத பஞ்சாப் அணி இந்த வெற்றியின் மூலம் தனது 4வது வெற்றியை பதிவு செய்துள்ளது.