சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய பாமக எம்எல்ஏ கோரிக்கை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய பாமக எம்எல்ஏ கோரிக்கை!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தருமபுரி சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், ’’தமிழகத்தில் உள்ள இளைஞர்களை அதிக அளவில் ஈர்க்கும் ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை.

எனவே, சிஎஸ்கே அணிக்கு ஐபிஎல்லில் விளையாட தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் திறமையான வீரர்கள் பலர் இருந்தும் சிஎஸ்கே அணியில் ஒரு தமிழ்நாட்டைச் சேர்ந்தவரைக் கூட தேர்வு செய்யவில்லை. பிற மாநில வீரர்களுக்கே அணியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

தமிழகம் சார்பில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் அணியாக சிஎஸ்கே அணி விளம்பரப்படுத்தப்பட்டு, பெரும் வர்த்தக லாபத்தை ஈட்டுகிறது. எனவே, தமிழக வீரர்கள் இல்லாத சிஎஸ்கே அணிக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்" என்று அவர் கூறினார். ஆனால், இந்தக் கோரிக்கைக்கு அரசு தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

logo
Kalki Online
kalkionline.com