9ம் வகுப்பு மட்டுமே படித்த ரிங்கு சிங்குவிற்கு அலுவலர் பதவி…

Rinkhu singh
Rinkhu singh
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமுமான ரிங்கு சிங், உத்தரப் பிரதேச அரசால் மாவட்ட அடிப்படை கல்வி அலுவலராக (District Basic Education Officer - BSA) நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 9ம் வகுப்பு மட்டுமே படித்த ரிங்கு சிங்குக்கு இந்த உயரிய பதவி வழங்கப்பட இருப்பது, மாநிலத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரிங்கு சிங், தனது கடின உழைப்பாலும், அசாதாரண கிரிக்கெட் திறமையாலும் கோடிக்கணக்கான மக்களின் மனதை வென்றவர். ஐபிஎல் போட்டிகளில் கடைசி ஓவரில் ஐந்து சிக்சர்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தது, அவரை தேசிய அளவில் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன் பிறகு இந்திய அணியிலும் இடம் பிடித்து, தனது திறமையை நிரூபித்தார். மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்து இந்த நிலையை அடைந்த ரிங்கு சிங், கல்வித் துறையில் பெரிய அளவில் கவனம் செலுத்த முடியவில்லை. அவர் 9ம் வகுப்பில் தோல்வியடைந்த பிறகு தனது பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேச அரசு, ரிங்கு சிங்கின் சர்வதேச அளவிலான விளையாட்டு சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக, 2022 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சர்வதேச பதக்கம் பெற்றவர்கள் நேரடி நியமன விதிகளின் கீழ் இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளது. இது ரிங்கு சிங்கின் அபாரமான வளர்ச்சிக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
சீனாவின் கொசு ட்ரோன்: உளவுத் துறையில் ஒரு புதிய மைல்கல்?
Rinkhu singh

இந்த அறிவிப்பு குறித்து பல தரப்பிலிருந்தும் கருத்துகள் வெளிவந்துள்ளன. சிலர், கல்வித் தகுதியை விட திறமைக்கு முக்கியத்துவம் அளித்து இந்த பதவி வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது என்று தெரிவித்துள்ளனர். அதேசமயம், கல்வித் தகுதியின் முக்கியத்துவத்தை கேள்விக்குள்ளாக்கும் விதமாக இந்த நியமனம் உள்ளதாக ஒரு சில விமர்சனங்களும் எழுந்துள்ளன.

எது எப்படி இருப்பினும், ரிங்கு சிங்கின் இந்த புதிய பொறுப்பு, இளம் தலைமுறையினருக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதன் மூலம் அரசுப் பணிகளிலும் சாதிக்க முடியும் என்பதற்கு ஒரு உத்வேகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இது உத்தரப் பிரதேச அரசின் ஒரு புரட்சிகரமான முடிவு என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com