ருதுராஜ் விலகல்: "என்ன செய்யப் போகிறோம்?" - வருத்தம் தெரிவித்த பயிற்சியாளர்!

Ruturaj Gaikwad
Ruturaj Gaikwad
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் திறமையாளர் ருதுராஜ் கெய்க்வாட், யார்க்ஷயர் கவுண்டி கிரிக்கெட் கிளப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இருந்து திடீரென விலகியுள்ளார். இந்த unexpected withdrawal கிளப் நிர்வாகத்தையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது அறிமுகப் போட்டிக்கு சில நாட்களே உள்ள நிலையில், கெய்க்வாட் விலகியது யார்க்ஷயர் அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

ருதுராஜ் கெய்க்வாட், கடந்த மாதம் யார்க்ஷயர் அணிக்காக எஞ்சியுள்ள ஆங்கில உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரது வருகை, யார்க்ஷயர் அணியின் பேட்டிங் வரிசைக்கு பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, கவுண்டி சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் கோப்பை போட்டிகளில் அவரது பங்களிப்பு அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது.

யார்க்ஷயர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அந்தோணி மெக்ராத், கெய்க்வாட்டின் விலகலை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "துரதிர்ஷ்டவசமாக, கெய்க்வாட் தனிப்பட்ட காரணங்களுக்காக தற்போது வரவில்லை. ஸ்கார்பரோ அல்லது எஞ்சிய சீசனுக்கு அவர் எங்களுடன் இருக்க மாட்டார். இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது." என்றார். கெய்க்வாட்டின் இந்த திடீர் முடிவிற்கான குறிப்பிட்ட காரணங்கள் குறித்து மெக்ராத் விரிவாக எதுவும் கூறவில்லை. "காரணங்கள் என்னவென்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் எல்லாம் சரியாகும் என்று நம்புகிறோம். எங்களுக்கு இப்போதுதான் தகவல் கிடைத்தது." என்றும் அவர் தெரிவித்தார்.

வரும் செவ்வாயன்று (ஜூலை 22) சர்ரே அணிக்கு எதிராக ஸ்கார்பரோவில் நடைபெறவிருந்த போட்டியில் கெய்க்வாட் யார்க்ஷயர் அணிக்காக அறிமுகமாகவிருந்தார். அவரது விலகல், இந்த முக்கியமான போட்டிக்கு முன் அணிக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

"நாங்கள் இப்போது என்ன செய்ய முடியும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களே உள்ளன. எனவே இப்போதைக்கு என்ன செய்ய முடியும் என்று உறுதியாகத் தெரியவில்லை. சாத்தியமான மாற்று வீரரைத் தேட முயற்சிக்கிறோம், ஆனால் கால அவகாசம் ஒரு பெரிய பிரச்சினை." என்றும் மெக்ராத் கவலை தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:
தளபதிக்கு எதிராக களமிறங்க அஞ்சிய SK? - திரை உலகில் பெரும் பரபரப்பு!
Ruturaj Gaikwad

முழங்கை எலும்பு முறிவு காரணமாக ஐபிஎல் 2025 சீசனின் நடுவில் இருந்து விலகிய கெய்க்வாட், அண்மையில் தான் காயம் முழுமையாக குணமடைந்து இந்தியா 'ஏ' அணியுடன் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. யார்க்ஷயரில் விளையாடுவது இங்கிலாந்து மண்ணில் தனது கிரிக்கெட் அனுபவத்தை மேம்படுத்த ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று கெய்க்வாட் முன்னர் தெரிவித்திருந்தார்.

யார்க்ஷயர் அணி தற்போது மாற்று வீரரை அவசரமாகத் தேடி வருகிறது. கெய்க்வாட்டின் திடீர் விலகல், அணிக்கு ஒரு எதிர்பாராத அடியாக அமைந்துள்ளதுடன், அவர்களின் எதிர்வரும் போட்டிகளுக்கான திட்டமிடலிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com