

ஐதராபாத்தில் இன்று நடைபெறும் 49-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்க்கொள்கிறது.
ஐதராபாத் அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
பஞ்சாப் அணி 9 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வி என 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளதில் 17-ல் ஐதராபாத்தும், 8-ல் பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளன.
இரு அணிகளும் தங்களது 7-வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதனைதொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்களை குவித்தது.
அதனையடுத்து இமாலய இலக்கான 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய பஞ்சாப் அணியால் ஐதராபாத் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன் மூலம் ஐதராபாத் அணி தனது 7-வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முன்னேறியது.