

சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தோனேசியாவின் ஃபஜார் அல்ஃபியான் - முகமது ஃபிக்ரி ஜோடியை இந்திய ஜோடி வீழ்த்தியது.
சுமார் 1 மணி நேரம் 13 நிமிடங்கள் நீடித்த இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், இந்தோனேசியா ஜோடியை 18-21, 21-17, 21-16 என்ற கணக்கில் இந்திய ஜோடி வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் சிங்கப்பூர் ஓபன் பட்டத்தைக் கைப்பற்றிய முதல் இந்திய ஆடவர் இரட்டையர் ஜோடி என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.
30-ம்தேதி நடந்த போட்டியில் இந்த இணை 21-19, 21-18 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் கிம் வோன் ஹோ-சியோ சியூங் ஜே ஜோடிக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் கடந்த 2024-ம் ஆண்டு தாய்லாந்து ஓபன் வெற்றிக்குப் பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த தங்களது டைட்டில் வறட்சிக்கு சாத்விக் - சிராக் ஜோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.