வாசகர் ஜமாய்க்கிறாங்க.அமுதா அசோக் ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.கேரட் காரக் குழம்பு.தேவையானவை : சற்று நீளமான பெரிய கேரட் துண்டுகள், தேங்காய்த் துருவல், புளி, மஞ்சள் தூள், உப்பு – தேவைக்ககேற்ப..செய்முறை : வாணலியில் எண்ணெய் ஊற்றி, தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்து, அதில் கேரட் துண்டுகளை சேர்த்து வதக்கவும். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து, தேங்காய்த் துருவலைச் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். கேரட் வெந்த பிறகு, அதில் அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாகக் கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.– அமுதா அசோக்ராஜா.பிரண்டைக் குழம்பு.தேவையானவை : நார் இல்லாத பிஞ்சு பிரண்டை துண்டுகள் – கைப்பிடி அளவு, தேங்காய்த் துருவல் – 2 ஸ்பூன், காய்ந்த மிளகாய் -10, தனியா – 1 ஸ்பூன், புளி பேஸ்ட் – 2 ஸ்பூன், எள் – 1 ஸ்பூன், உப்பு – 2 ஸ்பூன், வெல்லம் – சிறு துண்டு..செய்முறை :புளி பேஸ்ட், உப்பை இரண்டு கப் தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பிரண்டை துண்டுகளை வதக்கவும். தேங்காய்த் துருவலையும் பொன்னிறமாக வதக்கவும். மிளகாய், தனியாவை தனித்தனியாக வறுத்து அரைக்கவும். தேங்காய்த் துருவலையும், வதக்கிய பிரண்டையும் சேர்த்து அரைக்கவும். எல்லாவற்றையும் கொதிக்கும் புளிக்கரைசலில் கொட்டி, வறுத்த எள்ளை பொடி செய்து வெல்லத்தையும் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும்..சுண்டைக்காய் குழம்பு.தேவையானவை : சுண்டைக்காய் வத்தல் – 1 ஸ்பூன், புளி பேஸ்ட் – 2 ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன், கறிவேப்பிலை, கடுகு – தலா 1 ஸ்பூன், மிளகாய் வற்றல், தனியா – 1 ஸ்பூன், சீரகம், மிளகு – தலா1 ஸ்பூன், பெருங்காயம் – 1 சிறு துண்டு, எண்ணெய் – 2 ஸ்பூன்..செய்முறை : மிளகாய் வற்றல், தனியா, சீரகம், மிளகு ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து பொடி செய்யவும். மீதி எண்ணெயில் சுண்டைக்காய் வத்தலை சிவக்க வறுத்து, எண்ணெயோடு அப்படியே வைக்கவும். புளி பேஸ்டையும், உப்பையும் இரண்டு கப் தண்ணீரில் கலந்து இரண்டு கொதி வரும் வரையில் கொதிக்க வைக்கவும். பிறகு வறுத்த பொடியைப் போட்டு நன்றாகக் கொதிக்க விடவும். கடைசியில் வறுத்த சுண்டைக்காய் வத்தலையும், எண்ணெயுடன் கறிவேப்பிலையும் போட்டு சிறிது நேரம் கொதித்த பின்பு, கடுகு தாளித்து இறக்கவும். (வெல்லம் வேண்டுமென்பவர்கள் சிறிது வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.).கொள்ளு குழம்பு.தேவையானவை : கொள்ளு – அரை கப், மிளகாய் வற்றல் – 4, சுக்கு – 1 துண்டு, பெருங்காயம் – கால் ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன், புளி பேஸ்ட் – 2 ஸ்பூன்..தாளிக்க : கடுகு – 1 ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப..செய்முறை : கொள்ளு, மிளகாய் வற்றல், சுக்கு, பெருங்காயம் எல்லாவற்றையும் எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். பிறகு உப்புடன் சேர்த்து பொடி செய்யவும். புளி பேஸ்ட்டையும், அரை தேக்கரண்டி உப்பையும், இரண்டு கப் தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கவும். இரண்டு கொதி வந்ததும், வறுத்த பொடியைப் போட்டு கொஞ்சம் கொதித்ததும் இறக்கவும். கடுகையும் வெறும் வாணலியில் வறுத்துத் தாளிக்கவும்..இருபுளி குழம்பு.தேவையானவை : நறுக்கிய வெண்டைக்காய் – 2, நறுக்கிய வெள்ளரிக்காய் – 1 துண்டு, நறுக்கிய முருங்கைக்காய், புளி – தேவைக்கேற்ப, கடைந்த தயிர் – 1 கப், எண்ணெய் – தேவையான அளவு, துருவிய தேங்காய் – 1 கப், காய்ந்த மிளகாய் – 8, வெந்தயம் – கால் ஸ்பூன், பச்சரிசி, கடுகு – தலா 1 ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, உப்பு – தேவைக்கேற்ப..செய்முறை : அரிசியை கால் மணி நேரம் ஊற வைக்கவும். இதற்கிடையில் புளியை ஊற வைத்து புளித்தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் மற்றும் வெந்தயத்தை சேர்த்து நன்றாக வறுக்கவும். இத்துடன் துருவிய தேங்காய் மற்றும் ஊற வைத்த அரிசியை சேர்த்து மைய அரைக்கவும். காய்கறிகளுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். காய்கறிகள் பாதி வெந்ததும் புளிக்கரைசல், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விடவும். காய்கறிகள் நன்றாக வெந்ததும் அரைத்த விழுது மற்றும் தயிர் சேர்க்கவும். குழம்பு ஒரு கொதி வந்ததும் இறக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்து சூடான சாதத்துடன் பரிமாறவும்.பின்குறிப்பு : விரும்பினால் மிளகையும் சேர்த்து அரைக்கலாம். சுவை அபாரமாக இருக்கும்..கொத்தமல்லிக் குழம்பு.தேவையானவை : சுத்தப்படுத்திய கொத்தமல்லி தழை – ஒன்றரை கப், காய்ந்த மிளகாய் – 4, தனியா – 1 ஸ்பூன், வெந்தயம், மிளகு, சீரகம் – தலா அரை ஸ்பூன், பெருங்காயம் – 2 சிட்டிகை, புளி – எலுமிச்சை அளவு, உரித்த சின்ன வெங்காயம் – 10, நறுக்கிய பூண்டு – 4 பல், நறுக்கிய தக்காளி – 1, கறிவேப்பிலை – சிறிது, எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப, கடுகு – அரை ஸ்பூன்..செய்முறை : வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், வெந்தயம், மிளகு, மிளகாய், தனியா சேர்த்து சிவக்க வறுக்கவும். இத்துடன் கொத்தமல்லி தழை, வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி மைய அரைக்கவும். இதற்கிடையில் புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதில் புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போனவுடன் அரைத்த விழுதை சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கி விடவும்..பின் குறிப்பு : இதில் மலைப்பூண்டை வதக்கி சேர்த்தால் சுவையாக இருக்கும்.
வாசகர் ஜமாய்க்கிறாங்க.அமுதா அசோக் ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.கேரட் காரக் குழம்பு.தேவையானவை : சற்று நீளமான பெரிய கேரட் துண்டுகள், தேங்காய்த் துருவல், புளி, மஞ்சள் தூள், உப்பு – தேவைக்ககேற்ப..செய்முறை : வாணலியில் எண்ணெய் ஊற்றி, தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்து, அதில் கேரட் துண்டுகளை சேர்த்து வதக்கவும். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து, தேங்காய்த் துருவலைச் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். கேரட் வெந்த பிறகு, அதில் அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாகக் கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.– அமுதா அசோக்ராஜா.பிரண்டைக் குழம்பு.தேவையானவை : நார் இல்லாத பிஞ்சு பிரண்டை துண்டுகள் – கைப்பிடி அளவு, தேங்காய்த் துருவல் – 2 ஸ்பூன், காய்ந்த மிளகாய் -10, தனியா – 1 ஸ்பூன், புளி பேஸ்ட் – 2 ஸ்பூன், எள் – 1 ஸ்பூன், உப்பு – 2 ஸ்பூன், வெல்லம் – சிறு துண்டு..செய்முறை :புளி பேஸ்ட், உப்பை இரண்டு கப் தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பிரண்டை துண்டுகளை வதக்கவும். தேங்காய்த் துருவலையும் பொன்னிறமாக வதக்கவும். மிளகாய், தனியாவை தனித்தனியாக வறுத்து அரைக்கவும். தேங்காய்த் துருவலையும், வதக்கிய பிரண்டையும் சேர்த்து அரைக்கவும். எல்லாவற்றையும் கொதிக்கும் புளிக்கரைசலில் கொட்டி, வறுத்த எள்ளை பொடி செய்து வெல்லத்தையும் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும்..சுண்டைக்காய் குழம்பு.தேவையானவை : சுண்டைக்காய் வத்தல் – 1 ஸ்பூன், புளி பேஸ்ட் – 2 ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன், கறிவேப்பிலை, கடுகு – தலா 1 ஸ்பூன், மிளகாய் வற்றல், தனியா – 1 ஸ்பூன், சீரகம், மிளகு – தலா1 ஸ்பூன், பெருங்காயம் – 1 சிறு துண்டு, எண்ணெய் – 2 ஸ்பூன்..செய்முறை : மிளகாய் வற்றல், தனியா, சீரகம், மிளகு ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து பொடி செய்யவும். மீதி எண்ணெயில் சுண்டைக்காய் வத்தலை சிவக்க வறுத்து, எண்ணெயோடு அப்படியே வைக்கவும். புளி பேஸ்டையும், உப்பையும் இரண்டு கப் தண்ணீரில் கலந்து இரண்டு கொதி வரும் வரையில் கொதிக்க வைக்கவும். பிறகு வறுத்த பொடியைப் போட்டு நன்றாகக் கொதிக்க விடவும். கடைசியில் வறுத்த சுண்டைக்காய் வத்தலையும், எண்ணெயுடன் கறிவேப்பிலையும் போட்டு சிறிது நேரம் கொதித்த பின்பு, கடுகு தாளித்து இறக்கவும். (வெல்லம் வேண்டுமென்பவர்கள் சிறிது வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.).கொள்ளு குழம்பு.தேவையானவை : கொள்ளு – அரை கப், மிளகாய் வற்றல் – 4, சுக்கு – 1 துண்டு, பெருங்காயம் – கால் ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன், புளி பேஸ்ட் – 2 ஸ்பூன்..தாளிக்க : கடுகு – 1 ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப..செய்முறை : கொள்ளு, மிளகாய் வற்றல், சுக்கு, பெருங்காயம் எல்லாவற்றையும் எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். பிறகு உப்புடன் சேர்த்து பொடி செய்யவும். புளி பேஸ்ட்டையும், அரை தேக்கரண்டி உப்பையும், இரண்டு கப் தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கவும். இரண்டு கொதி வந்ததும், வறுத்த பொடியைப் போட்டு கொஞ்சம் கொதித்ததும் இறக்கவும். கடுகையும் வெறும் வாணலியில் வறுத்துத் தாளிக்கவும்..இருபுளி குழம்பு.தேவையானவை : நறுக்கிய வெண்டைக்காய் – 2, நறுக்கிய வெள்ளரிக்காய் – 1 துண்டு, நறுக்கிய முருங்கைக்காய், புளி – தேவைக்கேற்ப, கடைந்த தயிர் – 1 கப், எண்ணெய் – தேவையான அளவு, துருவிய தேங்காய் – 1 கப், காய்ந்த மிளகாய் – 8, வெந்தயம் – கால் ஸ்பூன், பச்சரிசி, கடுகு – தலா 1 ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, உப்பு – தேவைக்கேற்ப..செய்முறை : அரிசியை கால் மணி நேரம் ஊற வைக்கவும். இதற்கிடையில் புளியை ஊற வைத்து புளித்தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் மற்றும் வெந்தயத்தை சேர்த்து நன்றாக வறுக்கவும். இத்துடன் துருவிய தேங்காய் மற்றும் ஊற வைத்த அரிசியை சேர்த்து மைய அரைக்கவும். காய்கறிகளுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். காய்கறிகள் பாதி வெந்ததும் புளிக்கரைசல், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விடவும். காய்கறிகள் நன்றாக வெந்ததும் அரைத்த விழுது மற்றும் தயிர் சேர்க்கவும். குழம்பு ஒரு கொதி வந்ததும் இறக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்து சூடான சாதத்துடன் பரிமாறவும்.பின்குறிப்பு : விரும்பினால் மிளகையும் சேர்த்து அரைக்கலாம். சுவை அபாரமாக இருக்கும்..கொத்தமல்லிக் குழம்பு.தேவையானவை : சுத்தப்படுத்திய கொத்தமல்லி தழை – ஒன்றரை கப், காய்ந்த மிளகாய் – 4, தனியா – 1 ஸ்பூன், வெந்தயம், மிளகு, சீரகம் – தலா அரை ஸ்பூன், பெருங்காயம் – 2 சிட்டிகை, புளி – எலுமிச்சை அளவு, உரித்த சின்ன வெங்காயம் – 10, நறுக்கிய பூண்டு – 4 பல், நறுக்கிய தக்காளி – 1, கறிவேப்பிலை – சிறிது, எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப, கடுகு – அரை ஸ்பூன்..செய்முறை : வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், வெந்தயம், மிளகு, மிளகாய், தனியா சேர்த்து சிவக்க வறுக்கவும். இத்துடன் கொத்தமல்லி தழை, வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி மைய அரைக்கவும். இதற்கிடையில் புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதில் புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போனவுடன் அரைத்த விழுதை சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கி விடவும்..பின் குறிப்பு : இதில் மலைப்பூண்டை வதக்கி சேர்த்தால் சுவையாக இருக்கும்.