–உஷாமுத்துராமன் திருநகர்
விண்ணில் பறக்க தெரிந்த
கண்ணில் நம்பிக்கை தெரிய.
நீ நம்புவது உன் இறக்கைகளையே!
நான் மனம் வெம்பி புழுங்கினால்
குணமடைய நீயே என் ஆசான்!
தனம் எவ்வளவு இருந்தாலும்
கண நேரம் கூட நம்பிக்கை இழக்காமல்
உன்னைப்போல– சுதந்திரப் பறவையாக
நிரந்தரமாக வலம் வர ஆசை!