தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கிடையாது: மதுரை மண்டல் மின்வாரியம் அறிவிப்பு!

தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கிடையாது: மதுரை மண்டல் மின்வாரியம் அறிவிப்பு!
Published on

மதுரை மண்டல மின்வாரியத்துறையில் பணீபுரியும் ஊழியர்கள் டிசம்பர் 7-ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்று

மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் உமாதேவி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அந்த சுற்ரறிக்கையில் கூறப்பட்டதாவது:


கடந்த 26-ம் தேதி நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப் பட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியாத பட்சத்தில் அவர்களுக்கு உடல் பாதிப்பு ஏதேனும் இருந்தால் அதுகுறித்த சான்றிதழை முறையாக சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பித்தால் அவர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது. அப்படி சான்றிதழ் சமர்பிக்காமலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமலும் உள்ள ஊழியர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்பட மாட்டாது.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com