மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் பருவ கால நோய்களான டெங்கு உள்ளிட்ட நோய்கள் அதிகம் பரவ வாய்ப்புள்ளது.
இதனால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு ஜெ.ராதாகிருஷ்ணன் அனுப்பிஒய கடிதத்தில் குறிப்பிட்டதாவது:
மாவட்ட ஆட்சியர்கள் ததம் மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளில் உரிய கவனம் செலுத்த வேண்டும்; மழை காலங்களில் ஏற்படும் டெங்கு போன்ற நோய்களை கட்டுப்படுத்த தயாராக இருக்க வேண்டும். சுகாதாரத் துறைக்கு அடுத்த 2 மாதங்கள் சவாலானதாக இருக்கும்; நோய் தடுப்பு பணிகளில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும்
–இவ்வாறு அவர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு வைரஸில் இருந்து தப்பிக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.