தனியாக வசிக்கும் பெண்களுக்கு புதிய ரேஷன் கார்டு: தமிழக அரசு அறிவிப்பு!

தனியாக வசிக்கும் பெண்களுக்கு புதிய ரேஷன் கார்டு: தமிழக அரசு அறிவிப்பு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழகத்தில் விவாகரத்து பெற்ற, கணவரை இழந்து தனியாக இருக்கும் பெண்கள், அல்லது பெற்றோரை விட்டு தனியாக இருக்கும் பெண்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தனியாக வாழ்ந்து வரும் பெண்களும், சட்டபூர்வமான விவாகரத்து ஆன பெண்களும் அவர்கள் தனி குடும்பம் என்ற தகுதியின் அடிப்படையில் தன் பெயரில் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம். இந்த புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் பெண்ணின் வீட்டில் சமையலறை இருக்க வேண்டும். மேலும் அப்பெண் தான் தனியாக இருப்பதற்கான சுய அறிவிப்பை குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆதார் நகல் மற்றும் கேஸ் சிலிண்டர் ரசீது ஆகியவற்றை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் அதன் அடிப்படையில் அவருக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.

இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com