யானை இருந்தாலும் ஆயிரம் பொன்..
இறந்தாலும் ஆயிரம் பொன்னாம்!
ஆனால் இருத்தலே துன்பமாய்..
வாழ்வே பெருங்கனவாய்
ஆனதே இந்த உயிருக்கு!
வனமெல்லாம் மனிதனின் வாழ்விடம்
ஆனதில் – பரிதவிக்கிறது ஆனைக் களிறு.
அவரவர் இருக்குமிடத்தில் இருந்துக்கொண்டால்
எல்லாம் சவுக்கியமே!
வனத்தை களிற்றின் வசமாக்கி
வாழ வைப்போம் இயற்கையை1
மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்.