மருத்துவ குணங்கள் நிறைந்த 4 இலைகள்

4 leaves full of medicinal properties
4 leaves full of medicinal properties
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on

நான்கு விதமான இலைகளில் அடங்கி உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் பற்றி தெரிந்துகொள்வோமா?

கேழ்வரகு இலை:

இந்த இலைகளில் முக்கியமான சத்துப்பொருட்கள் அடங்கி உள்ளது. கேழ்வரகு இலையில் மிகுதியாக உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி இரத்த சர்க்கரையை கட்டுப் படுத்துகிறது. இதில் செறிந்துள்ள புரதம் உடல் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளது. இதில் செறிந்து கிடக்கும் இரும்பு சத்தானது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. மற்றும் அனீமியாவை தடுக்கிறது. மேலும் இந்த இலைகளில் உள்ள விட்டமின் A பார்வைக்கு நலம் பயக்கும். விட்டமின் C ஆனது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது மற்றும் விட்டமின் K ஆனது இரத்தம் உறைவதை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் சத்தானது உடலின் தசை இயக்கத்தை சீராக வைத்திருக்கவும், இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தவும் உதவுகிறது. இந்த இலையில் உள்ள கால்சியம் எலும்புகள், பற்கள் நலனுக்கு பலனாக இருக்கிறது.

2. வாழை இலை:

இதில் அடங்கியுள்ள நார்சத்தானது செரிமானத்தை மேம்படுத்தி மற்றும் ஹோலிஸ்டிக் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. காலேர் நார்வளம் (kale fiber) மற்றும் ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து செல்கள் பாதிக்கப்படுவதை தடுக்க உதவுகிறது. பொட்டாசியம் சத்தானது இரத்த அழுத்தத்தைக் கட்டுபடுத்தி மற்றும் தசை செயல்பாட்டை மேம்படுத்தும். அடர்த்தியாக உள்ள குளோரோஃபில் உடல் சுத்திகரிப்பு குணங்களை அதிகரித்து இரத்தத்தை சுத்தப் படுத்துகிறது. வாழையிலை அடர்த்தியான பலவிதமான சத்துக்களை கொண்டுள்ளதால் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
நம் குணம் ஒன்றே நாம் வாழும் முறையினை தீர்மானிக்கிறது..!
4 leaves full of medicinal properties

3. முந்திரி இலை:

இந்த இலைகளில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி இரத்த சர்க்கரை அளவை கட்டுப் படுத்துகிறது.

முந்திரி இலைகள் இந்தியாவின் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு நோய்களை குணமாக்க பயன்படுத்தப்படுகிறது. இரத்த சுத்திகரிப்பு, நோய்எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தல் மற்றும் சிறுநீர்பாதை நோய்களுக்கு வழிகாட்டுதல் ஆகியவற்றில் பயன்படுகின்றன. மேலும் இதில் செறிந்துள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் செல்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன. இதில் அடங்கியுள்ள என்சைம்கள் செரிமானம் மற்றும் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மேலும் மரபணு குறைபாடுகளை சீராக்கி உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்து கின்றன.

4. அருகம்புல்:

அருகம்புல்லில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை மேம்படுத்தி இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் அடங்கியுள்ள புரதமானது உடல் வளர்ச்சிக்கு முக்கியமானது. தொற்று எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. விட்டமின் A ஆனது பார்வை நலனுக்கு, விட்டமின் C நோய் எதிர்ப்பு சக்திக்கு மற்றும் விட்டமின் K இரத்தம் உறைய உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
பல(ன்)ம் தரும் 10 ஜூஸ் வகைகள்!
4 leaves full of medicinal properties

மேலும் இதில் உள்ள குளோரோஃபில் உடலின் சுத்திகரிப்பு குணங்களை அதிகரித்து இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் செல்களுக்கு பாதுகாப்பு அளித்து உடல் நலனுக்கு பயனுள்ளதாகிறது. இரும்பு சத்தானது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. மற்றும் அனீமியாவை தடுக்கிறது.

இந்த இலைகளை நாம் அடிக்கடி பயன்படுத்துவதால் எல்லா சத்துக்களும் கிடைக்கப்பெற்று ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னேற்றலாம்.

logo
Kalki Online
kalkionline.com