உடல் சூட்டை தணிக்கும் மகத்துவம் மிக்க 6 கீரைகள்!

புதினா
புதினா

கோடையில் முதலில் நாம் கவனிக்க வேண்டியது நம் உடல் உஷ்ணத்தை தவிர்ப்பது எப்படி என்பதைத்தான். மிகவும் எளிமையான முறையில் கீரைகளை சூப் வைத்து குடிக்கலாம். அவற்றை துவையல், மசியல் செய்து உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட 6 கீரைகளின் மகத்துவங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

புதினா: இது நல்ல வாசம் மட்டுமல்ல, 16 பல்வேறு ஊட்டச்சத்துகளும் நிறைந்தது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ஸ்கள் உள்ளன. மேலும், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளது. வைட்டமின் சி, டி, இ, ஏ போன்ற நோய் எதிர்ப்பு காரணிகளும் உள்ளன. இது செரிமானம் மற்றும் வாய் நாற்றம் போக்கும். புதினா குளிர்ச்சி தன்மையை கொண்டுள்ளது. அதனால் நமது வாய் பகுதிகளில் ஏதாவது துர்நாற்றம் வீசும்போது புதினாவை வாயில் போட்டு மென்றால் வாய் துர்நாற்றம் நீங்கி விடும்.

இதில் இயற்கையாகவே ஜீரண சக்தி இருப்பதால் இதனை நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது கோடையில் ஏற்படும் செரிமான கோளாறு மற்றும் மலம் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் ஆகியவற்றைக்கு புதினா சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

கொத்தமல்லி: இது கமகமக்கும் நறுமணம் கொண்ட கீரையாகும். அதோடு, உங்கள் உணவிற்கு ஒரு தனித்தன்மை வாய்ந்த சுவையினை சேர்க்கிறது. இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். கண் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும், இதில் வைட்டமின் கே உள்ளதால் எலும்புகளை உறுதிப்படுத்தக் கூடியது. கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளன.

கொத்தமல்லி
கொத்தமல்லி

கோடைக்காலத்தில் கொத்தமல்லி இலை கண் பார்வையை மேம்படுத்துவதோடு, செரிமானத் தன்மையை அதிகரிக்க உதவுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைக்கவும், வாய் துர்நாற்றத்தை போக்கவும் உதவுகிறது. உடலின் அழுத்தத்தை குறைக்கிறது. இந்த இலைகள் நமது செரிமான மண்டலம் வழியாக உணவை வேகமாக நகர்த்த உதவுகிறது. இதனால் நாம் வயிறு உப்புசம் இல்லாமல் எப்போதும் வயிறு இலகுவாக இருப்பதை உணர்கிறோம். கொத்தமல்லியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கிறது.

வெந்தயக் கீரை
வெந்தயக் கீரை

வெந்தயக் கீரை: உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் கொண்ட வெந்தயக் கீரையில் குளுக்கோஸ்யை கட்டுப்படுத்தகூடிய அளவிளான கிளைசெமிக் அளவும் உள்ளது. இதில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் எலும்பு பலவீனத்தைத் தடுக்கும். உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இதன் குளிர்ச்சித் தன்மை உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். கபம், சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம். வெந்தயக் கீரையை வேகவைத்து, வெண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால், பித்தத்தினால் வரும் மயக்கம் சரியாகும்.

இதிலுள்ள அதிகப்படியான இரும்புச்சத்து இரத்தசோகையை வராமல் தடுப்பதோடு உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. வெந்தயக்கீரை புதிதாக பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. பிரசவ வலி மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. மேலும், வயிற்றில் ஏற்படும் அலர்ஜி, குடல் அலர்ஜி, குடல் அல்சர் போன்றவற்றை தடுப்பதோடு இரத்தத்தில் கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.

லெட்யூஸ் கீரை: லெட்யூஸ் நீர்ச்சத்து நிறைந்த கீரை. கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை சரிசெய்ய உதவுகிறது இந்தக் கீரை. இதை வாங்கி வந்ததும் சமையல் செய்துவிடுவது நல்லது. இல்லை என்றால் வாடினால் அதன் நீர்ச்சத்து போய்விடும். குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதும் நல்லதில்லை.

லெட்யூஸ் கீரை
லெட்யூஸ் கீரை

உடல் வீக்கத்தையும், இதய நோய்களையும் தடுக்கக்கூடிய தன்மை இந்தக் கீரைக்கு உண்டு. இதில் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும், இந்தக் கீரையை சாப்பிட்டு வந்தால் நரம்பு மண்டலம் வலுப்பெறும், நல்ல தூக்கம் கிடைக்கும், செரிமான பிரச்னைகளை சரி செய்யும்.

பசலைக் கீரை: செரிமான பிரச்னைகள் முதல், உடல் எடையை குறைக்கும் தன்மை வரைக்கும் பசலைக் கீரை உதவுகிறது. மேலும், இதில் போலிக் அமிலம், இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் அதிகளவில் நார்ச்சத்து உள்ளன. பசலைக் கீரை கண் பார்வையை மேம்படுத்தும், எலும்புகளை வலுவாக்கும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளெக்ஸ் இதில் நிறைந்துள்ளன.

பசலைக் கீரை
பசலைக் கீரை

கோடைக்காலத்தில் உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு அடிக்கடி தண்ணீர் தாகம் எடுப்பவர்களுக்கு உகந்தது இந்தக் கீரை. சிறுநீரைப் பெருக்கும் தன்மை கொண்ட இந்த கீரை, சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கிறது. நீர்க்கடுப்பு, நீர் அடைப்பு போன்றவைகளுக்கும் இது நல்ல தீர்வாகும்.

கறிவேப்பிலை
கறிவேப்பிலை

கறிவேப்பிலை: மணமும் மருத்துவத் தன்மையும் நிறைந்தது கறிவேப்பிலை. இதை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், வயிற்று புண் ஆகியவை சரியாகும். எலுமிச்சம் பழச்சாறு மற்றும் கறிவேப்பிலைச் சாறை சர்க்கரையுடன் சேர்த்து உட்கொள்ள, கோடைக்காலத்தில் ஏற்படும் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும்.

இதையும் படியுங்கள்:
அச்சச்சோ... இந்த 7யும் பிரஷர் குக்கரில் சமைக்காதீங்க!
புதினா

பயணத்தின்போது வாந்தி வருவது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்படுகிறதா? எலுமிச்சையோடு சேர்த்து கறிவேப்பிலைகளையும் முகர்ந்து பாருங்கள். நொடிப்பொழுதில் வாந்தி உணர்வு மறைந்துவிடும். முகர்ந்து பார்ப்பது மட்டுமன்றி, கறிவேப்பிலை பொடியையும் தண்ணீரில் கலந்து வாந்தி உணர்வை நிறுத்துவதற்கான மருந்தாகப் பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com