உஷ்ண கோளாறுகளைப் போக்கும் கடவுளின் கனி!

A fruit of God that cures heat disorders
A fruit of God that cures heat disordershttps://uyironline.in

திராட்சை இயற்கையான சர்க்கரையின் சிறந்த மூலமாகும். இது உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கும். மேலும், இவை வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டிருக்கின்றன. 'கடவுளின் கனி’ என்று செல்லமாக அழைக்கப்படும் பெருமையுடையது கொடி முந்திரி என்ற திராட்சைப்பழம்.

திராட்சை பழத்தில் சர்க்கரை சத்து, கார்போஹைட்ரேட், டெக்ஸ்டாஸிரஸ், ப்ரெக்டொஸ், பெக்டின், பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், புரதச்சத்து, சுண்ணாம்பு சத்து, தாமிரம் மற்றும் இரும்பு சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. கோடைக் காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய நீர் சத்து அடங்கிய பழம் திராட்சை.

திராட்சையில் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12, C போன்ற சத்துக்களும், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்களும் ஏராளமாக உள்ளன. பித்தத்தை தணிக்கக்கூடிய சக்தி இந்தப் பழத்துக்கு உண்டு. உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், அதற்கு இந்தப் பழம் கை கொடுத்து உதவுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. புதிய இரத்தத்தை ஊற வைக்கும் ஆற்றல் இதற்கு உள்ளது.

கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கிறது திராட்சைப்பழம். இதனால் தமனிகள் சுத்தமாகின்றன. இந்தப் பழத்திலிருக்கும் ரெஸ்வெராட்ரோல் என்ற கலவை, இதய செயல்பாட்டுக்கு உறுதுணையாகிறது. திராட்சையில் உள்ள சேர்மங்கள் லிப்பிட்களைக் கட்டுப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளதால், இதய நோய்களை நெருங்கவிடாமல் செய்கிறது.

பலவீன நரம்புகளை பலப்படுத்த திராட்சை உதவுகிறது. இதன் காரணமாக, மூளையும், இதயமும் வலிமை பெறுகின்றன. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், திராட்சைப் பழம் நம்முடைய சருமத்தை பாதுகாக்கிறது. இதிலுள்ள லைகோபீன் மற்றும் ரெஸ்வெராட்ரோல் இரண்டுமே சருமத்தின் நிறத்துக்கு பொலிவை தருகின்றன. சருமத்தில் ஈரப்பதத்தை பராமரிக்க உறுதுணையாக இருக்கின்றன.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், நார்ச்சத்து நிறைந்த திராட்சையை தாராளமாக சாப்பிடலாம். அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகளை போக்குகிறது திராட்சை பழம்.

திராட்சை பழத்தை சாப்பிட்டு வருபவர்களுக்கு, சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதில்லை. திராட்சையில் க்ளுக்கோஸ் சத்து அதிகம் இருப்பதால், சாப்பிட்ட உடனே தெம்பு கிடைத்துவிடும். அதுபோல, உடலில் ஏற்படும் உஷ்ண கோளாறுகளை இந்தப் பழம் தீர்க்கிறது. சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் போன்றவற்றை சீராக்கி, தாராளமாக சிறுநீர் பிரிய உதவுகிறது. திராட்சையில் நீர்ச்சத்து, சோடியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது என்பதால் இது மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது.

தொடர்ந்து திராட்சை பழங்களை சாப்பிடுகிறவர்களுக்கு நுரையீரல் அழற்சி நோய்களான ஆஸ்துமா மற்றும் பிசிஒடி எனும் நுரையீரல் நோயின் தாக்கம் குறைவதாக அமெரிக்க ஜார்ஜியா பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். திராட்சையில் உள்ள ஸரெஸ்வெரட்ரால்தான் இதற்குக் காரணம். இது காதில் ஏற்படும் தொற்று நோய்கள் ஆபத்திலிருந்தும் நம்மை காப்பாற்றும் என்கிறார்கள்.

பச்சை திராட்சையை விட கருப்பு மற்றும் சிவப்பு திராட்சைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், உடல் செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கிறது என்கின்றனர். இது புற்றுநோய், நீரிழிவு, அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. கருப்பு திராட்சை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் எந்த நோயிலிருந்தும் விரைவாக மீட்க உதவுகிறது. கருப்பு திராட்சையில் ரெஸ்வெராட்ரோல் மற்றும் க்வெர்செடின் காணப்படுகின்றன. இந்த இரண்டு சேர்மங்களும் கொலஸ்ட்ராலால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கின்றன. கருப்பு நிற திராட்சை பழங்களில் உள்ள லூட்டீன், ஸியாக்ஸான்தின் (Zeaxanthin) போன்ற கூட்டுப் பொருட்கள் கண்களின் ரெட்டினாவில் சிதைவு ஏற்படுவதையும், மாக்குலர் (macular) சிதைவு நோய் வருவதையும் தடுத்து நிறுத்த உதவுகின்றன

தினமும் 60 கிராம் திராட்சை சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்பதை அயர்லாந்து ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இதனால் உடலில் சர்க்கரை கூடாது. காரணம், அதிலுள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்.

இதையும் படியுங்கள்:
கோடை வெயிலுக்கு குளிர்ச்சியோடு புத்துணர்வு தரும் சில உணவுகள்!
A fruit of God that cures heat disorders

திராட்சை பழ விதைகளில் OPC எனும் ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. இது வைட்டமின் சியை விட 20 மடங்கு ஆற்றலையும், வைட்டமின் ஈயை விட 50 மடங்கு ஆற்றலும் கொண்டது. இந்த opc உடலை காயங்களிலிருந்தும், முதுமையிலிருந்தும் பாதுகாக்கிறது என்கிறார்கள். இது சிவப்பு நிற திராட்சையில் அதிகம் உள்ளதாம்.

தொற்று நோய்கள் பரவுவதைத் தடுக்கும் ஆற்றல் திராட்சை பழத்தில் உள்ள உயர் வேதிப்பொருளான ‘ரெஸ்வெட்ரோல்’ என்ற பொருளில் உள்ளது என மிலன் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மேலும், இது செரிமான மண்டலத்தையும், நரம்பு மண்டலத்தையும் சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. நோய் தொற்று பரவும் நேரத்தில் திராட்சை பழங்களை அதிகளவில் சாப்பிட தொற்று பரவாமல் தடுக்கலாம். இதய மற்றும் புற்றுநோய் ஆபத்தையும் இது தடுக்கிறது. இது திராட்சை பழத்தின் தோலில்தான் உள்ளது.

திராட்சை பழத்தில் பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. எனவே, இதை தொடர்ந்து சாப்பிட்டால், மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com