Drinking Tea on an Empty Stomach
Drinking Tea on an Empty Stomach

தினசரி வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்கள்? போச்சு! 

Published on

உலகில் உள்ள மிகவும் பிரபலமான பானங்களில் தேநீரும் ஒன்று. அதன் சுவை நறுமணம் மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காக பலரால் விரும்பி குடிக்கப்படுகிறது. பலர் தங்களது காலைப் பொழுதை ஒரு கப் தேநீருடனே தொடங்குகிறார்கள். இருப்பினும் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் ஏற்படும் விளைவுகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்தப் பதிவில் அதைப்பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

அதிக அமிலத்தன்மை: பிளாக் டீ மற்றும் கிரீன் டீ போன்ற வகைகளில் டானின்கள் மற்றும் காஃபின் உள்ளது. இது வயிற்று அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்கும். வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் அதிகப்படியான அமிலம் உற்பத்தியாகி அசௌகரியம், நெஞ்செரிச்சல் மற்றும் அமில ரிப்ளக்ஸ் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். இதனால் வயிற்றுப்புண்கள் அமிலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என்பதால், வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

செரிமான அசௌகரியம்: தேநீர் ஒரு டையூரிக் விளைவைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. அதாவது இது சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் குடல் இயக்கத்தை ஊக்குவிக்கும். ஆனால் வெறும் வயிற்றில் தேநீர் அருந்துவதால் செரிமான அமைப்பு தூண்டப்பட்டு குடல் இயக்கத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் சிலருக்கு வயிற்றுப்போக்கு உண்டாக்கலாம். 

ஊட்டச்சத்து உறிஞ்சுவதில் குறைபாடு: தேனீரில் கேடசின் எனப்படும் சேர்மங்கள் உள்ளன. அவை ஆக்சிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளதால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இருப்பினும் இந்த கேடசின்கள் இரும்பு மற்றும் பிற அத்தியாவசிய தாதுக்களுடன் இணையும்போது உடல் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவது தடுக்கப்படுகிறது. எனவே வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பதால் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதில் குறை ஏற்படலாம். எனவே ரத்த சோகை இருப்பவர்கள் வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பதைத் தவிர்க்கவும்.

இதையும் படியுங்கள்:
எவரெஸ்ட் சிகரத்தின் மறைக்கப்பட்ட உண்மைகள்… இது தெரிந்தால்? 
Drinking Tea on an Empty Stomach

நீரிழப்பு:  தேநீர் ஒரு திரவமாக இருந்தாலும் இதன் டையூரிக் விளைவால் சிறுநீர் உற்பத்தி அதிகரிக்கும். எனவே வெறும் வயிற்றில் தேநீர் உட்கொள்ளும்போது அதிக நீரிழப்புக்கு பங்களித்து, சோர்வு, தலைச்சுற்றல், பலவீனம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கலாம். எனவே தேநீர் அருந்திய பிறகு நாள் முழுவதும் உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். 

மோசமாகும் தூக்கம் முறைகள்: டீயில் காஃபின் உள்ளது. இது தூக்க முறைகளில் தலையிடக்கூடியதாகும். வெறும் வயிற்றில் தேநீர் அருந்துவதால் எப்போதும் உங்களை விழிப்புணர்வுடன் இருக்கச் செய்து தூங்குவதில் சிரமத்தை ஏற்படுத்தலாம். இது உங்களது ஸ்லீப்பிங் சைக்கிளை மோசமாக்கி பகலில் சோர்வுக்கு வழிவகுக்கும்.

logo
Kalki Online
kalkionline.com