தேங்காய் பூ சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

செப்டம்பர் 02 - உலக தென்னை தினம்
தேங்காய் பூ சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கரு வளர்ச்சியே ஆகும். தேங்காய் பூவில் தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கின்றன. இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போலவே ருசியாக இருக்கும்.

தேங்காய் பூவில் மிக அதிக ஊட்டச்சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இரு மடங்கு அதிகரிக்கும். பருவகாலத் தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கும். மன அழுத்தம் அல்லது வேலை பளு அதிகம் இருப்பவர்கள் தேங்காய் பூவைச் சாப்பிட்டால் முழு சக்தி கிடைப்தோடு, நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பர்.

உங்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த சாய்ஸ். இதிலுள்ள புரதம், வைட்டமின் உங்கள் குடலுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்கலைக் குணமாக்குகிறது. தேங்காய் பூ இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இதயத்தில் படியும் கொழுப்பைக் கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை தேங்காய் பூ கரைக்கிறது. இதனால் இதய நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. மேலும், தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் தேங்காய் பூவைச் சாப்பிடலாம். இது தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு பாதிப்பை குணப்படுத்துகிறது.

தேங்காய் பூ உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில் குறைந்த அளவு கலோரிகள் இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. வளர்ச்சி மாற்றத்தைத் தூண்டுவதால் உடலில் கொழுப்பு சேராமல் வேகமாக உடல் எடை குறையும்.

சிறுநீரக பாதிப்பை தேங்காய் பூ குறைக்கிறது. சிறுநீரகத் தொற்றுநோய்களைக் குணப்படுத்துவதோடு, நச்சுக்களை வெளியேற்றி, உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. தேங்காய் பூவில் முக்கியமாக முதுமையைத் தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. உடல் சுருக்கங்கள், வயதான தோற்றம், சருமத் தொய்வு போன்றவற்றை நெருங்க விடாது. சூரியக் கதிர்களால் உண்டாகும் சரும பாதிப்புகளையும் இது தடுக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com