

உணவுக்கு ருசி சேர்ப்பது தேங்காய். தேங்காய்ப் பாலில் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. அவற்றை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இப்பதிவில் காண்போம்.
* ஆப்பம், இடியாப்பம் கொழுக்கட்டை போன்ற பதார்த்தங்களை தேங்காய்ப் பாலில் ஊற வைத்து சாப்பிட வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆறும்.
* தேங்காயை நன்றாக மென்று அந்தப் பாலை நீண்ட நேரம் வாயில் வைத்திருந்தால் வாய்ப்புண் ஆறும்.
* முகத்தில் எண்ணெய் பசை அதிகம் இருந்தால் தேங்காய் உடைத்த தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை துடைத்து வந்தால் முகத்தில் உள்ள தூசுகள், எண்ணெய்ப் பசை ஆகியவை அறவே நீங்கிவிடும்.
* இளநீரில் சிறிது சந்தனம் சேர்த்து கழுத்தில் தடவி வந்தால் வேர்க்குரு நீங்கும். நல்ல இதமாகவும் இருக்கும்.
* சிறிதளவு சீரகத்துடன், தேங்காய் பால் ஊற்றி அரைத்து கொப்பளங்கள் மீது போட்டு வர இரண்டு நாட்களில் கொப்புளங்கள் ஆறும்.
* தேங்காய் பாலுடன் நெய் சேர்த்து பின் நாட்டுக்கோழி முட்டையுடன், வெந்தயக்கீரையையும் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டால் ஒரே இடத்தில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் சோர்வோ மற்ற எந்த தொந்தரவும் இன்றி வேலை செய்ய முடியும்.
* மஞ்சள், கருஞ்சீரகம் இவைகளை இடித்து பொடி செய்து தேங்காய்ப் பாலில் ஊற வைத்து அடுப்பில் காய்ச்ச எண்ணெய் பதம் வரும். வந்ததும் இறக்கி ஆற வைத்து சொறி, படைகளின் மீது தடவி வர குணம் ஆகும்.
* தேங்காயில் பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தி ஏற்படும்.
* ஞாபக மறதிக்கு ஒரு பத்தை தேங்காயும் நாலு பாதாம் பருப்பையும் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.