

2017 ஆம் ஆண்டு, தீபம் இதழில், 'முத்திரை பயிற்சி’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
இந்தத் திருக்குறளின் பொருள்: நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கை உணர்வுடனும் செய்யவேண்டும். ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு அதில் உள்ள சாதக, பாதகங்களை ஆராய்ந்து அதன்பிறகு நல்ல விஷயத்தில் செயல்படவேண்டும். அவ்வாறு இல்லாமல் கவனக்குறைவாகச் செயல்படும்போது அதன் விளைவுகளும், அதனால் ஏற்படும் பலன்களும் மிக மோசமாக இருக்கும். அப்படிப்பட்டவன் வாழ்க்கை எரிகின்ற நெருப்பின்முன் நின்ற (வைக்கப்பட்ட) வைக்கோல்போர்போல எரிந்து அழிந்துவிடும்.