கரடி பொம்மைகளைக் கட்டிப்பிடித்துத் தூங்குவதால் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள்!

Physical problems that can occur in a child who sleeps with a teddy bear
Physical problems that can occur in a child who sleeps with a teddy bear
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

குழந்தைகள் பொம்மைகளைக் கட்டிப்பிடித்து தூங்குவது சகஜமான ஒன்றுதான். இன்னும் சில குழந்தைகள் பொம்மை இல்லை என்றால், தூங்குவதற்கே அடம் பிடிக்கும். ஆனால், இதுபோன்ற மிருதுவான பொம்மைகளை குழந்தைகள் அருகில் வைத்துக்கொண்டு தூங்குவது சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

குழந்தைகள் பொம்மைகளை அருகில் வைத்துக்கொண்டு தூங்கும்போது Rhinitis, தும்மல், இருமல், சளி மற்றும் வேறு சில அழற்சி பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும், இதுபோன்ற பொம்மைகளில் Lead, cadmium போன்ற ரசாயனங்கள் அதிக அளவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுபோன்ற சுவாசப் பிரச்னை குழந்தைகளுக்கு வர அதிகக் காரணம் ஜீன்ஸ், வளர்ப்புப் பிராணிகள், சிகரெட், Dust mites ஆகியவையாகும்.

மூன்று முதல் பதினைந்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகளையே இது அதிகம் பாதிக்கிறது. சிறு குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் டெடிபியர் பொம்மைகளால் rhinitis போன்ற அழற்சி பிரச்னைகள் வருவதோடு மட்டுமில்லாமல், இது ஆஸ்துமா பிரச்னை வருவதற்கும் வழிவகுக்கும்.

Dust mites இதுபோன்ற பொம்மைகளில் ஒட்டிக்கொண்டு இருப்பதால், இந்த பொம்மைகள் அதிகம் பயன்படுத்தும் குழந்தைகளின் அருகிலேயே இருப்பதால் சுலபமாக அவர்களை பாதித்து விடுகிறது.

இதில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, பொம்மைகளை  சுடு தண்ணீரில் அலசி வெயிலில் காய வைக்க வேண்டும். அதிகம் பயன்படுத்தப்படாத பொம்மைகளை பாதுகாப்பாக எடுத்து வைப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
பாமாயிலில் தயாரான உணவு இதயப் பிரச்னைகளை ஏற்படுத்துமா?
Physical problems that can occur in a child who sleeps with a teddy bear

இதுபோன்ற நோய்கள் குழந்தைகளைத் தாக்காமல் இருக்க, தாய்மார்கள் குழந்தைகளுக்கு முதல் 3 மாதங்கள் தாய்ப்பால் கொடுப்பது Rhinitis போன்ற பிரச்னைகள் வராமல் பாதுகாக்கிறது. குழந்தைகளுக்கு அருகில் புகைப்பிடிப்பதை தவிர்ப்பது நல்லது. வீட்டில் உள்ள பெட் ஷீட், தலையணை உறை போன்றவற்றை தவறாது துவைத்து நன்றாகக் காய வைத்து பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். வீட்டில் காற்றை சுத்தப்படுத்தும் செடிகளை வைப்பது நல்ல தூய்மையான காற்றை குழந்தைகள் சுவாசிக்க வழிவகுக்கிறது. இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி குழந்தைகளை நோய்களிடம் இருந்து பாதுகாப்பது அவசியமாகும்.

logo
Kalki Online
kalkionline.com