குறட்டைக்கு பின்னால் உள்ள அறிவியல் இதுதான்! 

Snoring
Snoring
Published on

தூக்கத்தின் போது வரும் குறட்டை ஒலி, பலரையும் பாதிக்கும் ஒரு பிரச்சனையாகும். இது வெறும் தொந்தரவாக மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கக் கூடும். இந்தப் பதிவில் குறட்டை எதனால் ஏற்படுகிறது மற்றும் அது சார்ந்த சில உண்மைகளைத் தெரிந்து கொள்வோம்.  

குறட்டை என்பது தூக்கத்தின் போது ஏற்படும் ஒரு சத்தமாகும். நாம் சுவாசிக்கும்போது, காற்று மூக்கு மற்றும் வாய் வழியாக சென்று தொண்டை, மூச்சுக் குழாயை அடைகிறது. இந்தப் பாதையில் எங்காவது அடைப்பு ஏற்படும்போது, காற்று வேகமாக நகர்ந்து சுற்றியுள்ள திசுக்களை அதிர்வுறச் செய்கிறது. இதன் விளைவாகவே குறட்டை ஒலி எழுகிறது.

குறட்டையின் வகைகள்:

  • வாய் குறட்டை: வாய் திறந்த நிலையில் தூங்கும்போது ஏற்படும் குறட்டை. இது பொதுவாக நாக்கு அல்லது அண்ணத்தின் அதிர்வால் ஏற்படுகிறது.

  • நாசி குறட்டை: மூக்கு அடைப்பு காரணமாக வாய் வழியாக சுவாசிக்கும்போது ஏற்படும் குறட்டை. இது பொதுவாக ஒவ்வாமை அல்லது சைனஸ் தொற்று காரணமாக ஏற்படுகிறது.

  • தொண்டை குறட்டை: தொண்டைப் பகுதியில் உள்ள திசுக்கள் தளர்வாக இருப்பதால் ஏற்படும் குறட்டை. இது உடல் பருமன் அல்லது வயதானவர்களில் அதிகமாகக் காணப்படுகிறது.

குறட்டை ஏற்படுவதற்கான காரணங்கள்:

  • நீண்ட மென்மையான அண்ணம், பெரிய தொண்டை அல்லது நாக்கு போன்ற உடல் அமைப்பு சார்ந்த காரணிகள் குறட்டைக்கு வழிவகுக்கலாம்.

  • தூக்கத்தின்போது தசைகள் தளர்வடைவதால், தொண்டை மற்றும் நாக்கு பின்னோக்கி நகர்ந்து காற்றுப்பாதையை அடைக்கலாம்.

  • உடல் பருமனானவர்களுக்கு தொண்டைப் பகுதியில் கொழுப்பு அதிகமாக இருப்பதால், காற்றுப்பாதை குறுகி குறட்டை ஏற்படலாம்.

  • மது மற்றும் புகை தொண்டை மற்றும் நாக்கு தசைகளைத் தளர்த்தி குறட்டையை அதிகரிக்கச் செய்யும்.

  • அலர்ஜி, சைனஸ் தொற்று போன்றவை மூக்கை அடைத்து வாய் வழியாக சுவாசிக்க வைத்து குறட்டை ஏற்படலாம்.

  • சில சமயங்களில் மல்லாந்து படுத்து உறங்குவது குறட்டையை அதிகரிக்கச் செய்யும்.

இதையும் படியுங்கள்:
குறட்டை வராமல் தப்பிக்க இது இருந்தால் போதுமாமே... அப்படியா?
Snoring

லேசான குறட்டை பொதுவாக கவலைக்குரியதாக இல்லாவிட்டாலும், சில நேரங்களில் குறட்டை தூக்கத்தில் மூச்சுத்திணறல் (sleep apnea) என்ற தீவிரமான உடல்நலப் பிரச்சனைக்கு வழிவகுக்கும். தூக்கத்தில் மூச்சுத்திணறலில், தூங்கும்போது பலமுறை சுவாசம் நின்று போகும். இது இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவைக் குறைத்து, பகலில் தூக்கம், சோர்வு, ஆற்றல் குறைதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீண்ட காலமாக தூக்கத்தில் மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு இதய நோய், உயர் ரத்த அழுத்தம், மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்து அதிகம்.

குறட்டை என்பது ஒரு சாதாரண பிரச்சனையாகத் தோன்றினாலும், இது பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கக் கூடும். எனவே, குறட்டையை கண்டுகொள்ளாமல் விட்டுவிடாமல், அதற்கான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com