புதினா எலுமிச்சை சாற்றில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

புதினா எலுமிச்சை சாறு
புதினா எலுமிச்சை சாறு
Published on

டலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வீட்டில் இருக்கும் சின்ன சின்ன பொருட்களின் உபயோகமே போதுமானது. உதாரணத்திற்கு எலுமிச்சம் பழம் மற்றும் புதினா இந்த இரண்டும் வீட்டில் இருந்தால் இதைவிட ஒரு சிறந்த உடல் ஆரோக்கியத்தை தரும் பொருள் இல்லை. தினமும் எலுமிச்சம் பழம் சாறில் புதினாவை கலந்து சாப்பிட்டுப் பாருங்களேன் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்கூடாகக் காண முடியும். அதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, தயாமின், கால்சியம் என பல வகையான சத்துக்கள் புதினாவில் உள்ளன. மேலும், இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளன. புதினாவில் குளிர்ச்சித் தன்மை இருப்பதால் கோடைக்காலத்தில் இதை அதிகம் பயன்படுத்த வேண்டும். மழைக்காலத்திலும் இந்த தண்னீரை குடிக்கலாம்.. இது உடலுக்கு குளிர்ச்சி தரும்.

புதினா வயிற்றுக்கு ஆரோக்கியமானது. இது அஜீரணம் மற்றும் வாயு பிரச்னையை நீக்குகிறது. வயிறு சம்பந்தமான பிரச்னைகள் இருந்தால் புதினா சாற்றை தண்ணீரில் கலந்து குடிக்கவும். இது வீக்கம், அஜீரணம், வாயு மற்றும் பிற பிரச்னைகளை நீக்குகிறது.

உடல் நச்சுக்களை நீக்க எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இது என்சைம் செயல்பாட்டை மேம்படுத்துவதுடன், கல்லீரலைத் தூண்டுகிறது. எலுமிச்சை ஒரு சிறந்த இயற்கையான நச்சு நீக்கியாக இருப்பதால் செரிமான ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. தொடர்ந்து புதினா, எலுமிச்சை தண்ணீரை உட்கொள்வது உடல் அமைப்பைச் சுத்தப்படுத்தி, உடலைச் சிறப்பாக செயல்பட வைக்கிறது.

நமது உடல் எப்போதுமே நீர்ச்சத்துடன் இருக்க வேண்டுமானால் புதினா தண்ணீரைக் குடிக்கலாம். இந்த சாறு கோடையில் மிகவும் ஆரோக்கியமானது. வெயிலில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகு இந்த ஆரோக்கியமான பானத்தை குடிக்கலாம். மழைக்காலத்திலும் இதைப் பருக உடல் சூடாக இருக்கும். மழைக்கால உஷ்ணத்தை தவிர்க்க இதை அருந்தலாம்.

இதையும் படியுங்கள்:
‘சிவயநம' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமை தெரியுமா?
புதினா எலுமிச்சை சாறு

புதினாவில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடை அதிகரிக்காது. புதினா தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு, இந்தப் புதினா நீர் பயனுள்ளதாக இருக்கும். புதினா, எலுமிச்சை இரண்டிலுமே வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது ஒரு சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால், செல் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. புதினா தண்ணீரை தொடர்ந்து குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

வைட்டமின் சி ஒரு வகை ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால், புதினா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பல நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. இந்த ஆரோக்கியமான பானத்தை உட்கொள்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.

மேலும், வாந்தி அல்லது குமட்டல் இருந்தால் புதினா இலைகளை சாப்பிடலாம் அல்லது புதினா சாற்றை தண்ணீரில் கலந்து குடிக்கவும். அப்படி குடிப்பதினால் குமட்டல், வாந்தி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com