இளநீரை விட விலை கம்மி.. கோடைக்கு ஏற்ற ஹெல்தி பானம் இதுதான்! ஒரு கிளாஸ் 'A' கிளாஸ்!

Tender coconut - butter milk
Tender coconut - butter milk
Published on

கோடை காலம் வந்துவிட்டாலே அனைவருக்கும் தாகம் அதிகமாகவே ஏற்படும். இதனால் ஐஸ்க்ரீம், ஜூஸ் கடைகளுக்கு படையெடுப்பார்கள். ஆனால் உடலுக்கு அதிக நன்மை தருவது இயற்கையாகவே இளநீர் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் இளநீர் விலை தாறுமாறாக உயர்ந்து ரூ.50-ல் இருந்து ஒரு சில இடங்களில் ரூ,80 வரையிலும் விற்பனை செய்கின்றனர். இதனால் சாமானிய மக்களால் தினசரி இளநீரை வாங்க முடியாத சூழல் உருவாகிறது. ஆனாலும் உடல் உஷ்ணத்தை குறைக்கவும், தாகத்தை தணிக்கவும் கம்மி விலையில் சிறந்த பானம் ஒன்று உள்ளது. அது வேறொன்றும் இல்லை மோர் தான். மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் இந்த மோரை நீங்கள் டம்ளர் கணக்கில் பருகலாம்.

வீட்டிலேயே தினசரி அனைவரும் பால் குடிக்கிறோம். இதில் இருந்து தயிர் பெற்றுக்கொள்ளலாம். பிறகு ஈஸியாக வீட்டிலேயே 5 பைசா செலவில்லாமல் ஹெல்தியான மோர் தயாரிக்கலாம். தயிரில் அதிக தண்ணீர் கலந்து அடித்தால் மோர் கிடைக்கும். இதில் அதிக நீர் சத்து இருக்கிறது என்பதால் வெயிலுக்கு உகந்த பானமாக கருதப்படுகிறது.

மோரில் குறைந்த கொழுப்பு உள்ளடக்கம் இருப்பதால், இது எடையிழப்புக்கு ஒரு சிறந்த பானமாக அமைகிறது.

உடலுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும் இந்த பானம் கால்சியம், பொட்டாசியம், புரதம், வைட்டமின்கள், மக்னீசியம் மற்றும் இன்னும் பிற நொதிகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை கொழுப்பைச் சேர்க்காமல் ஆற்றல் அளவை சீராக வைத்திருக்க உதவுகின்றன. நீண்ட நேரம் வயிறு நிரம்பியதாக உணர்வதன் மூலம் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடும் வாய்ப்பைக் குறைக்கலாம்.

இஞ்சி, மிளகு, சீரகம் உள்ளிட்ட பல்வேறு மசாலாப் பொருட்கள் மோர் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மசாலாப் பொருள்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. மேலும் கொழுப்பு நிறைந்த உணவுகளை கழுவவும், குடல் சுவரை விடுவிக்கவும் கணிசமான உணவுக்குப் பிறகு இதை அருந்தலாம். இந்த பானம் அருந்துவது டிஸ்பெப்சியா மற்றும் உடல் வெப்பத்தைக் குறைக்கும் சிறந்த இயற்கை சிகிச்சைகளில் ஒன்றாக அமைகிறது. இது செரிமானத்திற்கு உதவுவதுடன், அதில் உள்ள புரோபயாடிக் நுண்ணுயிரிகள் வயிற்று நோய்களை ஏற்படுத்தும் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது.

இது வியர்வை உற்பத்தியைக் குறைத்து முழு உடலையும் அமைதிப்படுத்த உதவுகிறது. கோடை வெப்பத்தில் இந்த அற்புதமான பானத்தை ஒரு கிளாஸ் அருந்துவதன் மூலம் உடலைக் குளிர்ச்சியாக வைக்கலாம். இதில், சேர்க்கப்படும் உப்பு, சீரகம் மற்றும் புதினா போன்றவை உடலை விரைவாக குளிர்விக்கும் ஒரு குணப்படுத்தும் பானமாகும். மாதவிடாய் நின்ற பிறகும், உடல் வெப்பத்தினால் அவதியுறும் பெண்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.

மோரில் 90% க்கும் அதிகமான நீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளது. குறிப்பாக, இதில் உள்ள பொட்டாசியம் நீரேற்றத்தை பராமரிக்க ஒரு சிறந்த பானமாக அமைகிரது. இந்த இனிமையான பானம், உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும், உடலின் நீர் சமநிலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com