கர்ப்பிணிகள் பால் குடித்தால் என்ன ஆகும்? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

கர்ப்பிணிகள்
கர்ப்பிணிகள்

வாழ்க்கையில் குழந்தை முதல் பெரியவர்களாக நாம் வளரும் வரை நமக்கு ஊட்டச்சத்து மிகவும் அவசியம். அதிலும் குறிப்பாக நாம் எப்படி பிறக்கிறோமோ அதை பொறுத்தே தான் வளர்கிறோம். இதனால் பிரசவ காலத்திலேயே குழந்தையை ஆரோக்கியமாக பெற்றுவிட்டால் பிறகு அந்த குழந்தை இந்த மண்ணில் ஆரோக்கியமாக இருக்கும்.

கர்ப்பிணிகளுக்கு பொதுவாகவே தினமும் குழப்பம் இருந்து கொண்டே இருக்கும், இதை சாப்பிடலாமா, இதை சாப்பிடகூடாதா என்று. அந்த கேள்விகளுள் ஒன்று தான் பால் குடிக்கலாமா என்பது.

கர்ப்ப காலத்தில் உடல் வறட்சியடையாமல் இருக்கவும், நீர்ச்சத்தை அதிகரிக்கவும் பால் குடிப்பதும் அவசியம். அதனால் கர்ப்பிணிகள் பால் குடிக்கலாம் தவறல்ல.

கர்ப்ப காலத்தில் பெண்கள் பாலை அதிகம் குடிப்பதால், அது கர்ப்பிணிகளுக்கு நன்மைகளைக் கொடுப்பது மட்டுமின்றி, வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை வழங்கும். ஏனெனில் இருப்பதிலேயே பாலில் தான் கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.

மேலும் ஆய்வு ஒன்றில் தினமும் அதிக அளவில் பால் குடிக்கும் கர்ப்பிணிகளை விட, 1 கப்புக்கும் குறைவாக பால் குடித்த கர்ப்பிணிகளுக்கு குழந்தை மிகவும் சிறியதாக எடை குறைவாக பிறந்துள்ளதாக சொல்கிறது.

ஆகவே குழந்தை நன்கு அழகாக, சற்று குண்டாக பிறக்க வேண்டுமானால், தினமும் குறைந்தது 3 டம்ளர் பால் குடிக்க வேண்டும். அதிலும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பது சிறந்தது.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கால்சியத்தின் அளவு அதிகம் தேவைப்படும். அத்தகைய கால்சியத்தை பெண்கள் அதிக அளவில் பால் குடித்து சேகரிக்க வேண்டும். ஏனெனில் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு கால்சியம் தேவைப்படுவதால், தாயில் உடலில் உள்ள கால்சியம் உறிஞ்சப்படுவதால், கர்ப்பிணிகள் தினமும் 3 கப் பாலாவது பருக வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com