Baakiyalakshmi 
சின்னத்திரை / OTT

ஜெயிலுக்கு போன ஈஸ்வரி... அதிர்ச்சியில் கோபி... அடுத்து நடக்கப்போவது என்ன?

விஜி

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஈஸ்வரி கைது செய்யப்பட்டதை அறிந்த கோபி அதிர்ச்சியில் உறைகிறார்.

1000 எபிசோடை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. ஒரு பக்கம் செழியன் வாழ்க்கை சீரழிந்து, தற்போது மீண்டும் புத்துணர்வு பெற்று வரும் நிலையில், எழிலை குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லி ஈஸ்வரி வற்புறுத்தி வருகிறார். இப்படி கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ராதிகா கரு கலைந்த பிறகு பல ட்விஸ்ட்களை கொண்டிருக்கிறது.

ராதிகாவின் கரு கலைந்ததற்கு ஈஸ்வரிதான் காரணம் என ராதிகாவும், கமலாவும் கோபியிடம் போட்டுக்கொடுக்க, தனது தாயை தவறாக நினைத்துக் கொள்கிறார் கோபி. இதனால் கொந்தளித்த கோபி, ஈஸ்வரிதான் ராதிகாவை கீழே தள்ளிவிட்டார் என நினைத்து தாயிடம் சண்டைக்குச் செல்கிறார். மேலும், தாயை வீட்டை விட்டு வெளியேற்றியதால் ஈஸ்வரி நிலைகுலைந்துள்ளார். வீட்டில் தினமும் அழுது கொண்டிருந்த ஈஸ்வரியை சமாதானம் செய்து, பாக்கியா வெளியூருக்கு காரில் அழைத்துச் சென்று மகிழ்ச்சி படுத்துகிறார்.

மேலும், ஈஸ்வரியின் பழைய சிநேகிதியை கண்முன் கொண்டு வந்து சர்ப்ரைஸ் செய்கிறார். இதனால் மகிழ்ச்சியடைந்த ஈஸ்வரி, மலரும் நினைவுகளாக தோழியிடம் பலவற்றை பகிர்ந்து மகிழ்ச்சியாக இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க, கஷ்டத்தின் எல்லைக்குச் சென்ற கோபி, மீண்டும் போதையை கையிலெடுக்கிறார். தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வர, ராதிகா கொந்தளித்து வருகிறார்.

போதையில் கமலாவை திட்டிய கோபியால் பிரச்சனை முட்டுகிறது. இதனால் பழி வாங்க வேண்டும் என நினைத்த கமலா, ஈஸ்வரி மீது போலீசில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து இன்று பாக்கியலட்சுமி இல்லத்திற்கு வந்த போலீசார், ஈஸ்வரியை குண்டுகட்டாக தூக்கி சென்றனர். இதனால் கதறி அழுத பாக்கியா குடும்பத்தினர், எவ்வளவு கூறியும் போலீசார் கேட்கவில்லை. மன வேதனைக்கு சென்ற ராமமூர்த்தி ரோட்டில் நின்றபடி அழுது கொண்டிருக்கிறர்.

அப்போது என்ன கூட்டம் என பார்க்க வந்த கோபியை அவரது தந்தை அடித்து விரட்டுகிறார். என்ன நடந்தது என தெரிந்து கொண்ட கோபி தாயை நினைத்து அதிர்ச்சியில் உறைகிறார். கடுப்பான தந்தை அவரை அடித்து, நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்டாய் என சாபம் விடுகிறார். உண்மையை அறிந்து கொண்ட கோபி. ஏற்கனவே கமலா மீது கோபத்தில் உள்ள நிலையில், தற்போது என்ன செய்ய போகிறார் என தெரியவில்லை. ராதிகாவை திட்டி விரட்டி விடுவாரா என பார்க்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

முதன் முதலாக விமானம் ஓட்டியவர் ஓர் இந்தியர்! ரைட்டா, ராங்கா?

நல்லெண்ணெய் Vs தேங்காய் எண்ணெய்: ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது?

மிகவும் விலையுயர்ந்த அக்வாரியம் வகை மீன்கள்!

காபியே மருந்தாகும் மாயம் தெரியுமா?

திரைத்துறையில் ஒரு மாபெரும் கவிஞனின் பங்கு!

SCROLL FOR NEXT