உணவு / சமையல்

பல பிணி போக்கும் பிரண்டை!

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

தேவையான பொருட்கள்: பிரண்டை-  கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 4, தேங்காய்த் துருவல் - கால் கப், பூண்டு பல் - 3, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, சின்ன வெங்காயம் 1 – 2, புளி - நெல்லிக்காய் அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

தாளிக்க : எண்ணெய் – தேவைக்கேற்ப, கடுகு - அரை டீஸ்பூன், உளுந்தம் பருப்பு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து.

செய்முறை:  பிரண்டையைக் கழுவி, சிறுசிறு துண்டு களாக நறுக்கிக்கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்த உடன் பிரண்டையை அதில் போட்டு நன்கு வதக்க வேண்டும். பிரண்டையை நன்கு வதக்கவில்லை என்றால் நாக்கு அரிப்பு எடுத்துவிடும். பிரண்டை நன்கு வதங்கிய உடன் அதனுடன் சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், புளி, பூண்டு, தேங்காய் துருவல், அனைத்தையும் சேர்த்து, வதக்கி எடுக்க வேண்டும். மிக்சியில் வதக்கிய பொருட்களுடன் உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய்யில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து அரைத்ததைச் சேர்த்தால் பிரண்டை சட்னி ரெடி.

தாயாருக்காக ஆதிசங்கரர் கட்டிய திருக்கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ஊருக்குப் போகப் போகிறீர்களா? இதைப் படிச்சிட்டு நிம்மதியாப் போங்க!

பாதாமி குகைகளின் ஆச்சரியத் தகவல்கள் தெரியுமா?

விருந்தோம்பலின் மறுபக்கம் மாறிவரும் கலாச்சாரம்!

ஒயிட் ஆனியனில் இருக்கும் ஒப்பற்ற நன்மைகள்!

SCROLL FOR NEXT